$640 மி. நிதி ஆதரவு

$640 மி. நிதி ஆதரவு

2 mins read

கொவிட்-19 கட்டுப்பாடுகள் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படுவதால் அதனால் வர்த்தகங்களுக்கும் தனி நபர்களுக்கும் ஏற்படும் இழப்புகளை சமாளிக்க 640 மில்லியன் வெள்ளி நிதியாதரவு திட்டத்தை நேற்று அரசாங்கம் அறிவித்தது.

உணவு மற்றும் பானம், சில்லறை விற்பனைக் கடைகள், திரையரங்கு கள், அரும்பொருளகம், கலைக் கூடங்கள், வரலாற்றுச் சிறப்புவாய்ந்த இடங்கள், குடும்பப் பொழுதுபோக்கு நிலையங்கள், பயணத் துறை, உடற் பயிற்சிக் கூடங்கள், கலை நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனங்கள், கலைக் கல்வி நிலையங்கள் உள்ளிட்டவை நீட்டிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் வெகுவாகப் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு நிதியாதரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட்டிக்கப்பட்ட வேலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் 25 விழுக்காடு வரை சம்பள ஆதரவு வழங்கப்படும் என்று நேற்று வெளியிட்ட அறிக்கை யில் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

கட்டுப்பாடுகள் தொடர்ந்து கடுமையாக்கப்படுவதால் பாதிப் படையும் குறிப்பிட்ட துறைகள் இதன் வழி நிலைமையை ஓரளவு சமாளிக்க முடியும்.

தற்போதுள்ள கொவிட்-19 கட்டுப்பாடுகள் குறைந்தது நவம்பர் 21ஆம் தேதி வரை அமலில் இருப்ப தால் வாடகைக் கட்டணச் சலுகை களையும் அரசு அறிவித்துள்ளது.

அதன்­படி, அர­சாங்­கத்­துக்­குச் சொந்­த­மான கட்­ட­டங்­களில் குடி யிருக்­கும் தகு­தி­பெற்ற வாடகை தாரர்­க­ளுக்கு அரை மாதம் வாட­கைக் கட்­ட­ணத்­தில் கழிவு வழங்­கப்­படும். தனி­யார் கட்­ட­டங் களில் உள்ள வாட­கை­தா­ரர்­க­ளுக்­கும் இத்­த­கைய கழிவு வழங்­கப்­ப­டு­கிறது.

இது குறித்த மேல் விவ­ரங்­களை சிங்­கப்­பூர் உள்­நாட்டு வரு­வாய் ஆணை­யம் பின்­னர் வெளி­யி­டும்.

தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் நிர் வகிக்­கும் உணவு நிலை­யங்­களில் உள்ள சமைக்­கப்­பட்ட உண­வுக் கடை­கள், ஈரச்­சந்தை கடைக் காரர்­கள் அல்­லது வாரி­யத்­தால் நிய­மிக்­கப்­பட்ட நடத்­து­நர்­க­ளுக்­கும் அரை மாதம் வாட­கைக் கழிவு வழங்­கப்­ப­டு­கிறது.

கொவிட்-19 ஓட்­டு­நர் நிவா­ரண நிதி, டாக்சி மற்­றும் தனி­யார் வாடகை கார் ஓட்­டு­நர்­க­ளுக்கு விரிவு­ப­டுத்­தப்­ப­டு­கிறது.

நவம்­பர் வரை டாக்சி, தனியார் வாடகை கார் ஓட்டுநர்களுக்கு நாள்­தோ­றும் பத்து வெள்ளி வழங்­கப்­படும். டிசம்­ப­ரில் இந்­தத் தொகை ஐந்து வெள்­ளி­யாக இருக்­கும்.

அமைச்­சு­க­ளுக்கு இடை­யி­லான பணிக்­கு­ழு­வின் செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் நேற்று பேசிய நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங், கட்­டுப்­பா­டு­கள் நீட்­டிக்­கப்­ப­டு­வ­தன் அவ­சி­யத்தை மக்­கள் புரிந்­து­கொள்ள வேண்­டும் என்று கேட்­டுக் கொண்­டார்.