ஆஸ்திரேலியா - சிங்கப்பூர் பயண ஏற்பாடு அடுத்த வாரம் அமைக்கப்படலாம்

சிங்கப்பூருடன் பாதுகாப்பான பயண வளையத்தை (travel bubble) அடுத்த வாரம் அமைக்க ஆஸ்திரேலியா திட்டமிடுகிறது. இதன்மூலம், நவம்பர் முதல் பயணிகள் ஆஸ்திரேலியா சென்றவுடன் அங்கு தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டியதில்லை என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 22) இந்தத் திட்டத்தை உறுதிப்படுத்தினார். தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்கான இந்தப் பயண ஏற்பாடு நவம்பர் 23ஆம் தேதிக்குள் நடப்புக்கு வரலாம் என அவர் குறிப்பிட்டார்.

தொடக்கக் கட்டமாக, அனைத்துலக மாணவர்களுக்கும் வர்த்தகப் பயணிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.

பிறகு, ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய டிசம்பர் முதல் சுற்றுப்பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படலாம்.

“சிங்கப்பூர் அரசாங்கத்துடன் இந்த ஏற்பாட்டை நிறைவுசெய்யும் இறுதிக்கட்டத்தில் நாங்கள் உள்ளோம்,” என்று செய்தியாளர்களிடம் திரு மோரிசன் கூறினார்.

திரு மோரிசனின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் ஃபேஸ்புக் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அதில், விசா வைத்திருப்போர் சிங்கப்பூரிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுவது குறித்து தாம் மகிழ்ச்சி அடைவதாக அவர் கூறினார்.

கடந்த ஜூன் மாதம் திரு மோரிசன் சிங்கப்பூருக்கு வருகை அளித்தபோது, இந்தப் பயண ஏற்பாட்டை தொடங்குமாறு அவருக்குத் தாம் ஊக்குவித்து இருந்ததாக பிரதமர் லீ சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!