தடுப்பூசி போட்டுக்கொண்ட ஏறக்குறைய 3,000 வெளிநாட்டு ஊழியர்கள், லிட்டில் இந்தியா மற்றும் கேலாங் சிராய் வட்டாரங்களுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 30ஆம் தேதியிலிருந்து ஒவ்வொரு முறையும் சுமார் எட்டு மணி நேரம் வரை இரு வட்டாரங்களுக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் செல்லலாம்.
தடுப்பூசி போட்டுள்ள வெளிநாட்டு ஊழியர்கள் மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை இடம்பெறுகிறது என்று நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் மனிதவள அைமச்சு தெரிவித்தது.
வெளிநாட்டு ஊழியர்களின் சமூக வருகை திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதாகவும் பொழுதுபோக்கு நிலையங்களுக்குச் செல்வதற்கான கட்டுப்பாடு களைப் படிப்படியாக தளர்த்து வதாகவும் அமைச்சு மேலும் சொன்னது.
இதன்படி லிட்டில் இந்தியா, கேலாங் சிராய் வட்டாரங் களுக்குச் செல்வது மட்டுமல்லாமல் தடுப்பூசி போட்ட அனைத்து வெளிநாட்டு ஊழியர்களும் வாரத்திற்கு மூன்று முறை பொழுதுபோக்கு நிலையங்களுக்குச் ெசல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கு முன்கூட்டியே 'ஏஆர்டி' சோதனை செய்ய வேண்டியதில்லை.
தடுப்பூசி போடாத வெளிநாட்டு ஊழியர்களும் வாரத்திற்கு மூன்று முறை பொழுதுபோக்கு நிலையங்களுக்குச் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.
ஆனால் வழக்கமான 'ஏஆர்டி' சோதனையில் தொற்று இல்லை என்பதை அவர்கள் உறுதிப் படுத்த வேண்டும் அல்லது அங்கு செல்வதற்கு முன்பு 'ஏஆர்டி' சோதனையின் எதிர்மறை முடிவை காட்ட வேண்டும்.
கடந்த மாதம் சோதனை முறையில் 700 தடுப்பூசி போட்ட ஊழியர்கள், ஒவ்வொரு முறையும் ஆறு மணி நேரம் வரை லிட்டில் இந்தியா சென்றுவர அனுமதிக்கப் பட்டனர். அங்கு செல்வதற்கு முன்பும் பின்பும் அவர்கள் 'ஏஆர்டி' சோதனை செய்து கொண்டனர்.
இம்முயற்சியின் தொடர்ச்சி யாக தற்போது மேலும் பல நூறு ஊழியர்களுக்கு கட்டுப்பாடுகளை மனிதவள அமைச்சு தளர்த்தி யிருக்கிறது.