சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித்தொற்று ஒழியவில்லை என்றாலும் நேரடியாக தீமிதி விழாவில் கலந்துகொள்ளும் வாய்ப்பு மக்களுக்கு இந்த ஆண்டு கிடைத்தது.
சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் பலத்த கட்டுப்பாடுகளைப் பின்பற்றி முகக்கவசம் அணிந்து நேற்று தீமிதித்த 950 பக்தர்களில் ஏறத்தாழ 85 விழுக்காட்டினர் சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளுமாக இருந்தனர்.
வழக்கமாக தீமிதியில் கலந்துகொள்வோரில் 40 விழுக்காட்டினர் சிங்கப்பூரர்களாக இருப்பார்கள் என்று சவுத் பிரிட்ஜ் ரோடு கோயில் நிர்வாகத் தலைவர் சீ லெச்சுமணன் கூறினார்.
இந்து அறக்கட்டளை வாரியம் அனைத்தையும் கச்சிதமாக ஏற்பாடு செய்து இருந்தது என்று பக்தர்களும் தீமிதித் திருவிழாவில் பொதுமக்களும் பங்கேற்க முடிந்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி என்று இந்து அறக்கட்டளை வாரியமும் தெரிவித்தன.
விரிவான செய்திகள் பக்கம் 4ல்