நவம்பர் 1 முதல் மின்னிலக்க அடையாள அட்டை பயன்பாடு

நவம்பர் 1 முதல் மின்னிலக்க அடையாள அட்டை பயன்பாடு

3 mins read
1b225110-c3b2-4a88-8b7d-24eeb0232979
-

இனி­மேல் அடை­யாள அட்­டையை எல்லா இடங்­க­ளுக்­கும் எடுத்­துச் செல்ல வேண்­டியதில்லை.

வரும் திங்­கட்­கி­ழமை நவம்­பர் 1ஆம் தேதி முதல் பெரும்­பா­லான சேவை­க­ளுக்கு சிங்­பாஸ் தொலை­பேசி செய­லி­யி­லுள்ள மின்­னி­லக்க அட்­டை­யைப் பயன்­டுத்­த­லாம்.அறி­வார்ந்த தேசம், மின்­னிலக்க அர­சாங்க அலு­வ­ல­க­ம், அர­சாங்க தொழில்­நுட்ப அமைப்பு ஆகியவை நேற்று வெளி­யிட்ட அறிக்கை இத­னைத் தெரி­வித்­துள்­ளன.

அனைத்து அர­சாங்க அமைப்பு ­க­ளி­லும் மின்­னி­லக்க அட்­டை­யைப் பயன்­ப­டுத்தி நேர­டிச் சேவை­க­ளைப் பெற­லாம். இயந்­தி­ரங்­கள் வழி­யான சேவை­க­ளுக்­கும் இத­னைப் பயன்­ப­டுத்­த­லாம்.

பல­துறை மருந்­த­கங்­களில் பெயர்ப் பதி­வு­செய்­தல், நூல­கங்­களில் நூல் இர­வல் பெறு­தல், குடி­நு­ழைவு, சோத­னைச் சாவடி ஆணை­யத்­தில் கடப்­பி­தழ் பெறுதல், வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கத்­தில் வீட்­டிற்­குப் பதி­வு­செய்தல் மற்­றும் சாவி பெறு­தல், அர­சாங்­கக் கட்­ட­டங்­களில் நுழை யும்­போது பெயர்ப் பதி­வு­செய்­தல் ஆகி­ய­வற்­றுக்கு சிங்­பாஸ் செயலி ­யில் உள்ள மின்­னி­லக்க அட்­டை­யைப் பயன்­ப­டுத்­தலாம்.

இப்­போ­தைக்கு, அடை­யாள அட்­டை­யைக் காட்ட வேண்­டிய சட்ட தேவை­க­ளுக்கு சில விதி­வி­லக்­கு­கள் இருக்­கும்.

திரு­ம­ணப் பதிவு, ஹோட்­டல்­களில் பதிவு செய்­தல், குற்­ற­வியல் நடை­மு­றைச் சட்­டம் அல்­லது தேசி­யப் பதி­வுச் சட்­டத்­தின் கீழ் மேற்கொள்ளப்­படும் விசா­ர­ணை­கள் போன்­ற­வற்­றுக்கு அடை­யாள அட்டை­யைக் காட்ட வேண்­டும்.

இந்த நடை­மு­றை­க­ளுக்­கும் மின்­னி­லக்க அடை­யாள அட்­டை­யைப் பயன்­ப­டுத்­து­வதை முறைப்­படுத்­து­வ­தற்­கான சட்­டத் திருத்­தம் குறித்து அர­சாங்­கம் நட வடிக்கை எடுத்து வருவதாக அறிக்கை கூறியது.

தொலை­பேசி அனு­ம­திக்­கப்­படாத பள்­ளித் தேர்­வு­கள், அடை யாள அட்­டை கொடுக்கப்பட வேண்டிய தேசிய சேவை சேர்க்கை போன்றவற்­றுக்கு அடை­யாள அட்­டையை எடுத்­துச் செல்ல வேண்­டும்.

மின்­னி­லக்க அடை­யாள அட்டை மற்­றும் பிற சிங்­பாஸ் அம்­சங்­க­ளின் பயன்­பாடு, வர்த்­த­கங்­கள் தங்­கள் பதி­வு­க­ளுக்­காக மக்­க­ளின் அடை­யாள அட்­டை­யைப் புகைப்­ப­டம் எடுப்­ப­தற்­கான தேவையைத் தவிர்க்­கும்.

வரும் திங்­கட்­கி­ழ­மை­யில் இருந்து, அர­சாங்க அமைப்­பு­கள் மக்­க­ளின் அடை­யாள அட்­டை­களை நகல் எடுக்­காது.

தொலைத்­தொ­டர்பு சேவை­களுக்­குப் பதிவு செய்­தல், வங்கி­களில் கணக்­கு­க­ளைத் திறத்­தல் போன்­ற­வற்­றுக்கு மின்­னி­லக்க அடை­யாள அட்­டை­யைப் பயன்­படுத்­து­வது குறித்து அர­சாங்­கம் பல தனி­யார் துறை­களு­டன் பேச்சு­ வார்த்தை நடத்தி வரு­வ­தாக, ஊட­கங்­க­ளின் கேள்வி­க­ளுக்­குப் பதி­ல­ளித்த அறி­வார்ந்த தேசம், மின்­னி­லக்க அர­சாங்க அலு­வ­ல­கத்­தின் திட்­ட­மி­டல், முன்­னு­ரிமை இயக்­கு­ந­ரக இயக்­கு­நர் திரு டான் சீ ஹாவ் கூறி­னார்.

அரசு நிறு­வ­னங்­கள் அல்­லது தனி­யார் துறை­யி­னர் மின்­னி­லக்க அடை­யாள அட்டையைப் புகைப்­படம் எடுக்­கா­மல் மக்­க­ளின் விவ­ரங்­களைப் பதிவு செய்­வ­தற்­கான வழி உண்டு என்­றார் திரு டான்.

மின்­னி­லக்க அடை­யாள அட்­டை­யில் உள்ள அர­சாங்­கத்­தி­டம் சமர்ப்­பிக்­கப்­பட்ட ஒரு­வ­ரது அண்­மைய புகைப்­ப­டம் அவரின் அடை­யா­ளத்தை உறு­திப்­ப­டுத்த உத­வும். மேலும், விவ­ரங்­க­ளைப் பெற அதில் 'பார்­' குறியீடு இருக்­கும்.

தனி­யு­ரிமை, பாது­காப்பு அம்­சங்­கள் மெய்­நி­கர் ஆவ­ணத்­தில் உருவாக்கப்­பட்­டுள்­ளன. எடுத்துக்­காட்­டாக, சிங்­பாஸ் செயலி ஒரு­வரது அடை­யாள அட்டை எண்­ணின் கடைசி நான்கு எழுத்­துக்­களை மட்­டுமே காட்­டு­கிறது, இது கைரேகை, முகத்தை 'ஸ்கேன்' செய்­வது அல்­லது மறைச்­சொல் மூலம் மட்­டுமே தெரி­ய­வ­ரும். மின்­னி­லக்க அடை­யாள அட்­டை­யிலுள்ள சிங்­கத்­தலை, அதனை தவ­றா­கப் பயன்­ப­டுத்­து­வ­தையோ சிதைப்­ப­தையோ தடுக்­கிறது.

எனி­னும், மின்­னி­லக்க அடை­யாள அட்டை, நேரடி ஆவ­ணத்­துக்கு முழு­மை­யான மாற்­றாகாது. அடை­யாள அட்டை தொலைந்­து­போ­னால், குடி­நு­ழைவு சோத­னைச் சாவடிகள் ஆணை­யத்­தி­டம் புகார் செய்து, புதிய அட்­டைக்கு விண்­ணப்­பிக்க வேண்­டும்.