2022 நடுப்பகுதிக்குள் 70% உலக மக்களுக்கு தடுப்பூசி: ஜி-20 அமைச்சர்கள் முடிவு

2022 நடுப்பகுதிக்குள் 70% உலக மக்களுக்கு தடுப்பூசி: ஜி-20 அமைச்சர்கள் முடிவு

1 mins read

அடுத்த ஆண்டு நடுப்­ப­கு­திக்­குள் உலக மக்­கள்­தொ­கை­யில் 70 விழுக்­காட்­டி­ன­ருக்கு கொவிட்-19 தடுப்­பூசி போட்டு முடிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­யில் இறங்க 20 பெரிய பொரு­ளி­யல் (ஜி-20) நாடு­க­ளின் சுகா­தார, நிதி அமைச்­சர்­கள் உறு­தி­பூண்­டுள்­ள­னர்.

மேலும் வருங்­கா­லத்­தில் தொற்­றக்­கூ­டிய வேறு­வகை கொள்­ளை­நோய்­களை எதிர்த்­துப் போரா­டு­வ­தற்­கான பணிக்­குழு ஒன்­றை­யும் அவர்­கள் ஏற்­ப­டுத்தி உள்­ள­னர்.

இதற்­கென தனித்­து­வ­மான நிதி வசதி ஏற்­ப­டுத்­தும் அமெ­ரிக்கா மற்­றும் இந்­தோ­னீ­சியா தெரி­வித்த யோசனை தொடர்­பில் ஜி-20 உடன்­பாடு எதை­யும் ஏற்­ப­டுத்­த­வில்லை.

இருந்­த­போ­தி­லும், கொள்­ளை­நோய் எதிர்ப்பு ஆயத்­த­நிலை, கொள்­ளை­நோய் தடுப்பு மற்­றும் சமா­ளிப்பு போன்­ற­வற்­றுக்­கான நிதி ஒதுக்­கீட்­டுத் தெரி­வு­களை பணிக்­குழு முன்­வைக்­கும் என அமைச்­சர்­கள் கூறி உள்­ள­னர்.

"உலக மக்­களில் குறைந்­த­பட்­சம் 40 விழுக்­காட்­டி­ன­ருக்கு இவ்­வாண்டு இறு­திக்­குள்­ளும் 70 விழுக்­காட்­டி­ன­ருக்கு 2022ஆம் ஆண்டு நடுப்­ப­குதி ­வாக்­கி­லும் தடுப்­பூசி செலுத்த வேண்­டும் என்­னும் உலக இலக்கை அடைய உத­வு­வோம்.

"அதற்­காக தடுப்­பூசி மற்­றும் அத்­தி­யா­வ­சிய மருத்­து­வத் தயாரிப்­பு­

க­ளின் விநி­யோ­கத்தை வேகப்­ப­டுத்து­ வ­தற்­கான நட­வ­டிக்­கை­யில் ஈடு­

ப­டு­வோம். இது தொடர்­பாக விநி­யோ­கத்­தி­லும் நிதி­யு­த­வி­யி­லும் எழும் சிக்­கல்­க­ளைக் களை­வோம்," என்று ஜி-20 அமைச்­சர்­கள் கூட்­டாக வெளி­யிட்ட அறிக்கை தெரி­விக்­கிறது.