ஆண்டுக்கு நான்கு துப்புரவு தினம்

தீவு முழுவதும் குடியிருப்புப் பேட்டைகளில் துப்புரவு சாதனக் கொட்டகைகள் அமைக்கப்படும்

சிங்­கப்­பூ­ரில் பொது இடங்­களைக் குப்பைக்­கூ­ளங்­கள் இல்­லாத தூய்­மை­யான இடங்­க­ளாக வைத்­தி­ருக்­கும் பழக்கத்தை மேலும் அதிக மக்­க­ளி­டம் நிலை­பெ­றச் செய்­யும் முயற்­சி­யாக நாடு முழு­வ­தும் உள்ள குடி­யி­ருப்­புப் பேட்டைகளில் துப்­பு­ரவு சாத­னக் கொட்டகை­கள் அமைக்­கப்­படும்.

பொதுச் சுகா­தார மன்­றம் நேற்று இதனை அறி­வித்­தது. இந்த ஆண்டு ஏப்­ரல் மாதம் தொடங்­கிய எஸ்ஜி துப்புரவு தினச் செயல்­திட்­டத்தை ஆண்­டுக்கு நான்கு முறை இடம்­பெ­றும் இயக்கமாக அது நீட்­டித்து உள்­ளது.

எஸ்ஜி துப்­பு­ரவு தினத்­தன்று காலை 4 மணி முதல் நள்­ளி­ரவு வரை பொதுப் பூங்­காக்­கள், தோட்­டங்­கள், பூங்கா இணைப்­புப் பாதை­கள், திறந்­த­வெளி இடங்­கள், குடி­யி­ருப்­புப் பேட்­டை­ தி­டல்­கள் ஆகி­ய­வற்­றில் துப்­பு­ரவு ஊழி­யர்­கள் பணி­களில் ஈடு­ப­ட­மாட்­டார்­கள்.

துப்­பு­ரவு ஊழி­யர்­கள் இல்லாவிடில் எந்த அள­வுக்­குக் குப்­பைக்­கூ­ளங்­கள் சேரும் என்­பது பற்றி பொது­மக்­கள் நன்கு புரிந்­து­கொள்ள வேண்­டும் என்ற நோக்­கத்­து­டன் இது இடம்­பெ­று­கிறது.

எஸ்ஜி துப்­பு­ரவு தினம் அடுத்த ஆண்டு மாதா­மா­தம் இடம்­பெ­றும் ஓர் இயக்­க­மாக மாறும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. அந்த தினத்தை ஆண்டுக்கு நான்­காக நீட்­டிக்­கும் செயல்­திட்­டம் நேற்று தொடங்­கப்­பட்­டது.

இம்மன்­ற­மும் தேசிய பூங்கா கழகமும் 17 நகர மன்­றங்­களும் சேர்ந்து அந்தச் செயல்­திட்­டத்தை புக்­கிட் பாத்­தோக்­கின் ஃபூஜி ஹில் பூங்­கா­வில் தொடங்­கின.

அந்­தப் பூங்­கா­வில் சமூக துப்பு­ர­வுச் சாத­னக் கொட்­டகை ஒன்­றை­யும் மன்­றம் நேற்று திறந்து­வைத்­தது.

அந்தச் சாதனக் கொட்­ட­கை­யில் வாளி, தள்ளு­வண்­டி­கள், குப்­பை­க­ளைப் பொறுக்கி எடுக்­கும் இடுக்கிகள் போன்ற துப்­பு­ரவு சாத­னங்­கள் இருக்­கும்.

அந்­தச் சாத­னங்­க­ளின் உத­வி­யு­டன் மக்­கள் பொது இடங்­களில் குப்­பைக்­கூளங்­களை அகற்றி சுத்­தப்­ப­டுத்­த­லாம்.

அத்­த­கைய ஏழு கொட்­ட­கை­கள் ஏற்­கெ­னவே பொது பூங்­காக்­களில் அமைக்­கப்­பட்டு உள்­ளன. அடுத்த சில மாதங்­களில் எல்லா நகர மன்­றங்­க­ளி­லும் அவை அமைக்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­படு­கிறது.

நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற மூத்த துணை அமைச்­சர் ஏமி கோர் நிகழ்ச்­சி­யில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்­டார். பொதுச் சுகா­தா­ர­மும் துப்­பு­ர­வும் மிக முக்­கி­யம் என்­பதை கொவிட்-19 வெளிச்­சம் போட்டுக்காட்­டி­ உள்­ள­தாக அமைச்­சர் தெரி­வித்­தார்.

தீவு எங்­கும் அமை­யும் துப்­பு­ரவு சாதனக் கொட்­ட­கை­களில் இருக்­கும் சாத­னங்­களை நகர மன்­றங்­கள் முறை­யாக பூச்சி மருந்து அடித்து சுத்­தப்­ப­டுத்­தும். குப்­பை­க­ளைச் சேக­ரிக்­கும்­போது குடி­மக்­கள் கையு­றை­க­ளைப் பயன்­ப­டுத்த வேண்­டும். நேற்­றைய நிகழ்ச்­சி­யில் துப்­பு­ரவு ஊழி­யர்­கள் சிறப்­பிக்­கப்­பட்­ட­னர்.

நேற்று தொடங்­கிய எஸ்ஜி துப்­பு­ரவு தினம் ஒரு மாத காலம் நீடிக்­கும் என்று தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!