தமிழகம்: பருவமழை தீவிரம்; தீபாவளி வரை கடும் மழை எச்சரிக்கை

தமிழகம்: பருவமழை தீவிரம்; தீபாவளி வரை கடும் மழை எச்சரிக்கை

2 mins read
6f5bfa1f-a296-4879-aacd-1751d33fd5e8
நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்த தால் குறுக்குத்துறை முருகன் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. படம்: தமிழக ஊடகம் -

தமிழ்­நாட்­டில் வட­கி­ழக்குப் பரு­வ­மழை சூடு­பி­டித்­துள்ள நிலை­யில், மாநி­லத்­தில் பல பகு­தி­க­ளி­லும் தீபா­வளிவரை கடும் மழை பெய்­யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் முன்­னு­ரைத்­துள்­ளது.

அந்த மாநி­லத்­தில் பல பகு­தி­களி­லும் கடந்த சில நாட்­க­ளாக தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பல மாவட்டங்களில் பள்­ளிக்­கூ­டங்­கள் மூடப்­பட்­டன.

நெல்லை, தென்­காசி, தூத்­துக்­கு­டி­யில் தொடர் மழை கார­ண­மாக தண்­ட­வா­ளத்­தில் தண்­ணீர் தேங்கி­ய­தால் ரயில் சேவை­கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. இரண்டு ரயில்­கள் நடு­வ­ழி­யில் நிறுத்­த­ப்­பட்­ட­தாக தகவல்­கள் தெரி­வித்­தன.

நவம்­பர் 4 ஆம் தேதி தீபா­வளி பண்­டிகை நெருங்­கும் நிலை­யில் ஏற்­கெ­னவே கடும் மழை பெய்து வரு­வ­தும், கடும் மழை தொடர்ந்து பெய்­யும் என்று முன்­னு­ரைக்­கப்­பட்டு இருப்­ப­தும் தீபா­வளி விற்­ப­னையை, பண்­டிகைக் குதூ­க­லத்­தைப் பெரிதும் பாதித்து வரு­வ­தாக பல தரப்­பினரும் தெரிவிக்­கி­றார்­கள்.

மாநி­லத்­தில் கொரோனா தொற்று குறைந்து வரு­வ­தால் கட்டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்ட நிலை­யில் இந்த ஆண்டு தீபா­வளி பண்­டிகைக் காலம் கொஞ்­சம் சுறு­சு­றுப்­பாக இருக்­கும் என்று பொது­வாக எதிர்­பார்க்­கப்­பட்­டது.

ஆனால் மழை கார­ண­மாக அந்த எதிர்­பார்ப்பு பொய்த்­து­விடும் போல் தெரி­ய­வ­ரு­வ­தாக தக­வல்­கள் குறிப்­பி­டு­கின்­றன.

தென்­மேற்கு வங்கக் கடல், அதனை ஒட்­டிய இலங்கை கடலோரப் பகு­தி­களில் காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடிக்­கும் என்­றும் அது அடுத்த சில நாட்­க­ளுக்கு மேற்கு நோக்கி மெது­வாக நக­ரக்­கூ­டும் என்­றும் வானிலை ஆய்வு நிலையம் தெரி­வித்­துள்­ளது.

இதன் கார­ண­மாக தமி­ழ­கத்­தில் பெரும்­பா­லான மாவட்­டங்­களில் இன்று முதல் தீபா­வளி வரை தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு இருப்­ப­தாக அது எச்­ச­ரித்­துள்­ளது.

தீபா­வளி நாளன்று குமரி, நெல்லை, தூத்­துக்­குடியில் அதிக கன­மழை பெய்ய வாய்ப்பு உள்­ள­தா­க­வும் எச்­ச­ரிக்­கப்­ப­ட்டுள்­ளது.

கட­லுக்­குச்­செல்ல வேண்­டாம் என்று மன்­னார் வளை­குடா மீன­வர்­க­ளுக்கு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. தீவிர கன­மழை கார­ண­மாக கட­லோர மாவட்­டங்­களில் சாலை­களில் பல்­வேறு இடங்­களில் மழை நீர் தேங்­கி­விட்­ட­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.