இந்தியா உறுதி: 2022 முடிவில் 5 பில்லியன் தடுப்பூசி தருகிறோம்

கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் உலகிற்கு உதவும் நோக்கத்தில் அடுத்த ஆண்டு முடிவு வாக்கில் 5 பில்லியன் கொவிட்-19 தடுப்பூசியை தயாரித்து தர இந்தியா தயாராக இருக்கிறது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரோம் நகரில் நடந்த ஜி20 கூட்டத்தில் சனிக்கிழமை இந்த உறுதியை வழங்கினார். கொவிட்-19 தொற்றைத் துடைத்தொழிக்கும் போராட்டத்தில் இந்தியா செய்து வரும் உதவிகளை திரு மோடி எடுத்துரைத்தார்.

ரோம் நகரில் திரு மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சிகள், அவர் ஆற்றிய உரை பற்றி இந்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ்வர்தன் செய்தியாளர்களிடம் விளக்கினார்.

அனைத்துலக பயணத்திற்கு வழி திறக்க வேண்டிய தேவை இருப்பதாகக் கூறிய திரு மோடி, தடுப்பூசி சான்றிதழை பரஸ்பரம் அங்கீகரிக்கும் ஓர் ஏற்பாடு தேவை என்றார்.

இந்தியாவின் சொந்தத் தயாரிப்பான கொவேக்சின் தடுப்பூசியை அவசர பயனீட்டு மருந்தாக உலக சுகாதார நிறுவனம் இன்னமும் அங்கீகரிக்க வில்லை. இந்த அங்கீகாரம் உடனே கிடைக்க வேண்டும் என்றும் அப்படி கிடைத்தால் மற்ற நாடுகளுக்கு இந்தியா உதவ முடியும் என்றும் திரு மோடி கூறியதாக இந்திய வெளியுறவு செயலாளர் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!