கொவிட்-19 சுயபரிசோதனை மலேசியர்களிடம் அதிகரிப்பு

கொவிட்-19 சுயபரிசோதனை மலேசியர்களிடம் அதிகரிப்பு

1 mins read

சுயமாக கொவிட்-19 தொற்­றுப் பரி­சோ­தனை செய்­து­கொள்­வது மலே­சிய மக்­க­ளி­டையே அதி­க­ரித்து வரு­வ­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தித்­தா­ளின் மலே­சிய செய்­தி­யா­ளர் தெரி­வித்­துள்­ளார். குறிப்­பாக, ஒன்­று­கூ­டல்­க­ளுக்­குச் செல்­லும் முன்­னர் தங்­க­ளைத் தாங்­களே பரி­சோ­தித்துக்­கொள்­வது அங்கு அதி­க­ரித்து வரு­கிறது.

கொரோனா கிரு­மி­யு­டன் வாழும் கட்­டத்தை நோக்­கிப் பய­ணம் செய்­யும் மலே­சியா, சுய­ப­ரி­சோ­த­னைக் கரு­வியை சிர­ம­மின்றி பெறு­வ­தற்­கான ஏற்­பா­டு­க­ளைச் செய்­துள்­ளது.

குறிப்­பாக, 'ஏஆர்டி' எனப்­படும் விரை­வுப் பரி­சோ­த­னைக் கரு­வி­யின் விலை சில மாதங்­க­ளுக்கு முன்­னர் 39.90 ரிங்­கிட்­டாக இருந்­தது. மேலும் குறிப்­பிட்ட மருந்­த­கங்­கள் மற்­றும் மருந்­துக் கடை­க­ளுக்கு மற்­றுமே அவற்றை விநி­யோ­கிக்­கும் உரிமை தரப்­பட்­டி­ருந்­தது.

ஆனால் அந்த நிலை­மை மாறி விட்­டது. நவம்­பர் 1 முதல் சுய

­ப­ரி­சோ­த­னைக் கருவி ஒவ்­வொன் றின் சில்­லறை விலை­யும் 6.90 ரிங்­கிட்­டா­கக் குறைந்­து­விட்­டது. 2,570 வர்த்தக நிறுவனங்களுக்கு இதனை விற்க அனுமதி தரப்பட்டுள்ளது.