மலேசிய கொவிட்-19 மரணத்தில் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம்

மலே­சி­யா­வில் கொவிட்-19 தொற்று கார­ண­மாக உயி­ரி­ழந்­தோ­ரில் பெரும்­பா­லா­னோர் நீரி­ழிவு மற்­றும் உயர் ரத்த அழுத்­தம் ஆகி­ய­வற்­றால் பாதிக்­கப்­பட்டு இருந்­த­தாக அந்­நாட்­டின் சுகா­தார அமைச்சு தெரி­வித்துள்­ளது.

இவ்­வாண்­டின் அக்­டோ­பர் 28ஆம் தேதி வரை­ மலே­சி­யா­வில் பதி­வான கொவிட்-19 மர­ணங்­களில் 37.3 விழுக்­காடு, மர­ண­ம­டைந்த 10ல் நால்­வ­ருக்கு நீரி­ழிவு நோய் பின்­னணி இருந்­தது.

கடந்த ஆண்­டில் கிட்­டத்­தட்ட இதே நிலை­தான். அப்­போது பதி­வான கொவிட்-19 மர­ணங்­களில் 38.3 விழுக்­காடு மர­ணங்­கள் நீரி­ழி­வு­டன் தொடர்­பு­டை­ய­தாக இருந்­தன என்று அமைச்­சின் நோய்க் கட்­டுப்­பாட்­டுப் பிரிவு துணை இயக்­கு­நர் ஃபெய்சுல் இட்ஸ்­வான் முஸ்­தஃபா கூறி­னார்.

"உல­க­ள­வில் ஒரு­வ­ரி­ட­மி­ருந்து மற்­ற­வ­ருக்­குப் பர­வாத நோயு­டன் வாழும் மக்­களே கொவிட்-19 கிரு­மித் தொற்­றுக்­கும் அத­னால் ஏற்­படும் மர­ணத்­திற்­கும் எளி­தாக ஆளா­கி­றார்­கள்.

"அதி­லும் நீரி­ழிவுடன் வாழ்­வோர் குறிப்­பாக, நீரி­ழி­வைக் கட்­டுப்­பாட்­டுக்­குள் வைக்­கத் தவ­றி­யோர் கொவிட்-19 தொற்­றால் அதி­கம் பாதிக்­கப்­ப­டு­கி­றார்­கள்," என்று அவர் 'சண்டே ஸ்டார்' செய்­தித்­

தா­ளி­டம் தெரி­வித்­தார்.

நீரி­ழிவு நோயாளி கொவிட்-19 தொற்­றால் பாதிக்­கப்­ப­டும்­போது அவ­ருக்கு உடல் எரிச்­சல் போன்ற கடு­மை­யான பக்­க­வி­ளை­வு­கள் ஏற்­ப­டு­வ­தா­க­வும் அவர் கூறி­னார்.

மலே­சி­யா­வில் 3.9 மில்­லி­யன் மக்­கள் அல்­லது மொத்த மக்­கள்­

தொ­கை­யில் ஐந்து பெரி­ய­வர்­களில் ஒரு­வர் நீரி­ழி­வு­டன் வாழ்­வ­தா­கத் தக­வல்­கள் தெரி­வித்­துள்­ளன.

இவர்­களில் கிட்­டத்­தட்ட பாதிப்­பேர் தங்­க­ளுக்கு நீரி­ழிவு இருப்­பதை அறி­யா­த­வர்­க­ளாக உள்­ள­னர் என்று சுகா­தார தலைமை இயக்­கு­நர் நூர் ஹிஷாம் அப்­துல்லா தெரி­வித்­துள்­ளார்.

உலக நீரி­ழிவு தினம் நேற்று கடைப்­பி­டிக்­கப்­பட்ட வேளை­யில் பொது­மக்­கள் நீரி­ழி­வின் அபா­யத்தை உணர்ந்து அதற்­கான பரி­சோ­த­னை­களை முன்­கூட்­டியே செய்­து­கொள்ள வேண்­டும் என்று மலே­சிய நீரிழிவுத் துறை துணைத் தலை­வர் ஜோங் கோய் சோங் வலி­யு­றுத்தி உள்­ளார்.

மலே­சி­யா­வில் 18 வய­துக்­கும் 40 வய­துக்­கும் இடைப்­பட்ட இளைய தலை­மு­றை­யி­ன­ரி­டம் காணப்­படும் நீரி­ழிவு கடந்த 15 ஆண்­டு­களில் இரட்­டிப்­பாகி உள்­ளது என்று அவர் தெரிவித்துள்­ளார்.

இதற்­கி­டையே, இளவய­துப் பிரி­வி­ன­ரி­ட­மும் நீரி­ழிவு அதி­க­ரித்து வரு­வ­தா­க மலே­சிய மருத்­து­வ சங்­கத் தலை­வர் கோ கர் சாய் தெரிவித்துள்ளார்.

குழந்­தைப் பரு­வ உடற்­ப­ரு­மன் இதற்கு முக்­கிய கார­ணம் என்­றும் தெரி­வித்­துள்­ளார்.

"எனவே உடற்பருமனை நன்கு கண்காணித்து அதனைக் கட்டுக்குள் வைக்க ஆண்டுதோறும் சுகாதாரப் பரிசோதனை செய்துகொள்ள வேண் டும். குறிப்பாக, குழந்தைகளுக்குப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும்," என்றார் அவர்.

மலேசியாவில் தொற்று இல்லாத நோய்களில் உயர் ரத்த அழுத்தம் முக்கியமானது என்று கூறிய அவர் நாட்டின் பத்தில் மூவர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார்.

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேசிய சுகாதார, நோயறிதல் ஆய்வின் முடிவுப்படி மொத்த மக்கள்தொகையில் 6.4 மில்லியன் பேர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்த தாக மதிப்பிடப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!