மக்கள் ஆரோக்கியம் குறைந்துவிட்டது

மக்கள் ஆரோக்கியம் குறைந்துவிட்டது

2 mins read

சிங்­கப்­பூர் மக்­க­ளி­டம் ஆரோக்­கி­யம் குறைந்து­விட்­ட­தால் அடுத்து வரும் மாதங்­களில் சுகா­தா­ரத்தை மேம்­ப­டுத்­தும் முயற்­சி­களை தீவி­ரப் ­ப­டுத்த சுகா­தார அமைச்சு திட்­ட­மிட்­டுள்­ளது.

அது, நீரி­ழி­வுக்கு எதி­ரான ஐந்­தாண்டு போர்­போல இருக்­கும் என்று அமைச்சு தெரி­வித்­துள்­ளது. நாட்­பட்ட நோய்­கள், ஆரோக்­கி­ய­மற்ற வாழ்க்கை முறை அதி­க­ரித்­துள்­ளதை அண்­மைய தேசிய மக்­கள்­தொகை சுகா­தார ஆய்வு தெரி­விக்­கிறது.

கொவிட்-19 கட்­டுப்­பா­டு­க­ளால் மக்­க­ளி­டம் உடல் உழைப்பு குறைந்­து­விட்­டது. கொள்­ளை­ நோய் சூழ­லில் உடல் ஆரோக்­கி­யம் மேலும் குறைந்­ததால் நிலைமை மேலும் மோச­மா­கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

சிங்­கப்­பூர் மக்­க­ளி­டம் தற்­போது காணப் ­ப­டு­கின்­றன சில ஆரோக்­கி­ய­மற்ற போக்­கு­கள் கவ­லை­ய­ளிக்­கும் விதத்­தில் இருப்பதை ஆய்வின் முடிவுகள் காட்டுகின்றன.

இரண்டு ஆண்­டு­க­ளி­லேயே உயர் ரத்த அழுத்­தத்­தால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை ஐம்­பது விழுக்­காடு கூடி­யுள்­ளது. 2017ல் 24.2 விழுக்­கா­டாக இருந்த இந்­தப் பிரச்­சினை, 2020 மார்ச் மாதம் முடிந்த எட்டு மாத ஆய்­வுக்­குள் 35.5 விழுக்­காட்­டுக்கு அதி­க­ரித்­து­விட்­டது.

நீரி­ழிவு நோய்க்கு எதி­ரான ஐந்­தாண்டு போருக்­குப் பிற­கும் அதே கால­கட்­டத்­தில் நீரி­ழிவு நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர் விகி­தம் 8.8 விழுக்­காட்­டி­லி­ருந்து 10.5 விழுக்­காட்­டுக்கு கூடி­யுள்­ளது. குறிப்­பாக இளை­யர்­கள் அதி­கம் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

அதே நேரத்­தில் மக்­கள்­தொ­கை­யில் மூன்றில் ஒரு பங்­கி­னர் ஓய்வு நேர ­ப­யிற்­சி களில் ஈடு­பட்­டுள்­ள­னர். இது, 2017ல் இருந்த 29.4 விழுக்­காட்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் சற்று அதி­கம்.

புகை­பி­டிக்­கும் பழக்­க­மும் குறைந்­துள்­ளது. புகை­பி­டிப்­ப­தற்­கான வயது வரம்பு அதி­க­ரிக்­கப்­பட்­ட­தற்கு இதற்கு ஒரு கார­ண­மாக இருக்­க­லாம் என நம்பப்படுகிறது. புகை­பி­டிக்­கும் பழக்­கம் 11.8 விழுக்­காட்­டி­லி­ருந்து 10.1 விழுக்­கா­டாக குறைந்­துள்­ளது.

தேசிய மக்­கள்­தொகை சுகா­தார ஆய்வு, 2019 ஜூலைக்­கும் 2020 மார்ச்­சுக்­கும் இைடயே நடத்­தப்­பட்­டது. 6,000 பேரி­டம் நேர்­கா­ணல், 5,000 பேரின் சுகா­தா­ரப் பரி­சோ­த­னை­கள் ஆகி­ய­வற்றை உள்­ள­டக்கி ஆய்வு நடத்­தப்­பட்­டது.

ஆய்வு பற்றி கருத்­து­ரைத்த சுகா­தார அமைச்சு, தற்­போ­தைய கொள்­ளை­நோய் சூழ­லில் ஆரோக்­கி­ய­மான வாழ்க்கை முறையை சிங்­கப்­பூ­ரர்­கள் பின்­பற்­று­வது அவ­சி­யம் என்று நினை­வூட்­டி­யது.

பொது­மக்­க­ளி­டம் ஆரோக்­கி­ய­மான பழக்­கத்தை மேம்­ப­டுத்த தேசிய நடை சவால் போன்ற சுகா­தா­ரத்தை மேம்­ப­டுத்­தும் முயற்­சி­கள் தொடர்ந்து செயல்­ப­டுத்­தப்­படும் என்று அமைச்சு குறிப்­பிட்­டது.

உதா­ர­ண­மாக, உயர் ரத்த அழுத்­தத்­திற்கு எதி­ரா­கப் போராட தேசிய அள­வில் உப்பு குறை­வான உணவை உட்­கொள்­ளும் பிர­சாரம் தொடங்­கப்­படும்.

இதற்­காக சுகா­தார மேம்­பாட்டு வாரி­யம், உப்பு குறை­வான சாறு மற்­றும் சுவை­யூட்­டி­களை நிறு­வ­னங்­கள் தயா­ரிப்­ப­தற்­கான நட­வ­டிக்கைகளை எடுக்­கும். இது குறித்த விவ­ரங்­கள் வரும் மாதங்­களில் வெளி­யி­டப்­படும்.

அடுத்த ஆண்டு இறு­தி­யி­லி­ருந்து குளிர்­பான நிறு­வ­னங்­கள் புதிய விவ­ரப்­பட்­டி­யலை அறி­மு­கப்­ப­டுத்த வேண்­டி­யி­ருக்­கும்.

அவற்­றின் மூலம் பானங்­கள் எவ்­வ­ளவு சத்­தா­னது என்­பதை பய­னீட்­டா­ளர்­கள் அறிந்து­கொள்ளலாம். மேலும் ஆரோக்­கி­ய­மற்ற குளிர்­பானங்­க­ளின் விளம்­ப­ரங்­களை தடை செய்யவும் அமைச்சு திட்­ட­மிட்­டுள்­ளது.

"உடல் ஆரோக்­கி­யம் தனிப்­பட்ட ஒரு­வ­ரின் பொறுப்­பா­க இருப்­ப­தால் ஆரோக்­கி­ய­மான நாடு என்ற நிலையை அடைய ஒவ்­வொ­ரு­வ­ரும் தங்­க­ளு­டைய பங்கை ஆற்ற வேண்­டும்," என்று சுகா­தார அமைச்சு ேகட்­டுக் கொண்­டது.