தடுப்பூசிப் பயணத்தடத் திட்டம்: கூடுதல் நகரங்களுக்கு எஸ்ஐஏ விமான சேவை

தடுப்பூசிப் பயணத்தடத் திட்டத்தின்கீழ், வரும் ஜனவரி 17ஆம் தேதியிலிருந்து கூடுதல் நகரங்களுக்கு விமான சேவைகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) நிறுவனம் வழங்கவிருக்கிறது.

ஆம்ஸ்டர்டாம், பார்சிலோனா, கோப்பன்ஹேகன், ஃபிராங்ஃபர்ட், லண்டன், மிலான், மியூனிக், நியூயார்க், பாரிஸ், ரோம், சியேட்டல், வேன்கூவர் ஆகிய நகரங்களில் இருந்து விமானங்களை தான் இயக்கவிருப்பதாக எஸ்ஐஏ வெள்ளிக்கிழமை (நவம்பர் 19) தெரிவித்தது.

ஜனவரி 19ஆம் தேதி முதல், ஹியூஸ்டன், மான்செஸ்டர் ஆகிய நகரங்களில் இருந்தும் விமானங்களை எஸ்ஐஏ இயக்கும்.

தடுப்பூசிப் பயணத்தடத் திட்டத்தின்கீழ், இந்த மாதம் 29ஆம் தேதி முதல், கோலாலம்பூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையே விமானங்கள் இயக்கப்படும் என்று எஸ்ஐஏ முன்னதாக அறிவித்திருந்தது.

இந்த மாதம் 29ஆம் தேதி முதல், தடுப்பூசிப் பயணத்தடத் திட்டத்தின்கீழ் இந்தோனீசியா, இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு பயணிகள் வரலாம் என்று போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் கடந்த திங்கட்கிழமை அறிவித்து இருந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!