மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மோடி

மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மோடி

1 mins read

இந்திய அரசாங்கம் அறிவித்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் கடந்த ஓராண்டுக்கு மேலாக அந்நாட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், விவசாயிகளுக்கு விருப்பமில்லாத அந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்றுக்கொள்வதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்தார்.

"அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்­திய மூன்று வேளாண் சட்­டங்­க­ளைத் திரும்பப் பெற்­றுக்­கொள்ள நாங்­கள் முடி­வெ­டுத்­துள்­ளோம். இம்­மா­தம் நாடா­ளு­மன்­றம் கூடும்­போது அதற்­கான பணி­களை நாங்­கள் நிறை­வேற்­று­வோம்.

"போராட்­டத்­தில் ஈடு­பட்டு வரும் விவ­சா­யி­களை வீடு திரும்­பு­மாறு கேட்­டுக்­கொள்­கி­றோம். புதிய

அத்­தி­யா­சத்­தைத் தொடங்கி ஒன்­றி­ணைந்து முன்­னே­று­வோம்," என்று சீக்­கி­யர்­கள் அனு­ச­ரிக்­கும் குரு நானக் ஜெய்ந்­தி­யன்று திரு மோடி நேற்று தெரி­வித்­தார்.

இம்­மாத இறு­திக்­குள் அந்த மூன்று வேளாண் சட்­டங்­களும் மீட்­டுக்­கொள்­ளப்­படும் என்று அவர் உறுதி அளித்­தார்.

"இந்­தி­யா­வின் விவ­சா­யி­கள், குறிப்­பாக சிறிய அள­வில் விவ­சா­யம் செய்­ப­வர்­க­ளின் நிலையை மேம்­ப­டுத்­தவே இந்த சட்­டங்­கள் அறி­விக்­கப்­பட்­டன.

"ஆனால் அவற்­றால் ஏற்­ப­டக்­கூ­டிய நன்­மை­க­ளைப் பற்றி விவ­சா­யி­கள் புரிந்­து­கொள்ள தவ­றி­விட்­ட­னர். அவர்­க­ளுக்­குப் புரிய வைக்க நாங்­கள் தவ­றி­விட்­டோம்," என்று பிர­த­மர் மோடி தெரி­வித்­தார்.

பஞ்­சாப் மாநி­லத்­தைச் சேர்ந்த ஆயி­ரக்­க­ணக்­கான விவ­சா­யி­கள் அந்த மூன்று வேளாண் சட்­டங்­

க­ளை­யும் எதிர்த்­துப் போராட்­டத்­தில் இறங்­கி­னர்.

தலை­ந­கர் புது­டெல்லி எல்­லை­யில் அவர்­கள் முகா­மிட்டு

அதி­ருப்­தியை வெளிப்­ப­டுத்­தி­னர். அவர்­களில் பெரும்­பா­லா­னோர்

சீக்­கி­யர்­கள்.