இந்திய அரசாங்கம் அறிவித்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் கடந்த ஓராண்டுக்கு மேலாக அந்நாட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், விவசாயிகளுக்கு விருப்பமில்லாத அந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்றுக்கொள்வதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்தார்.
"அதிருப்தியை ஏற்படுத்திய மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ள நாங்கள் முடிவெடுத்துள்ளோம். இம்மாதம் நாடாளுமன்றம் கூடும்போது அதற்கான பணிகளை நாங்கள் நிறைவேற்றுவோம்.
"போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை வீடு திரும்புமாறு கேட்டுக்கொள்கிறோம். புதிய
அத்தியாசத்தைத் தொடங்கி ஒன்றிணைந்து முன்னேறுவோம்," என்று சீக்கியர்கள் அனுசரிக்கும் குரு நானக் ஜெய்ந்தியன்று திரு மோடி நேற்று தெரிவித்தார்.
இம்மாத இறுதிக்குள் அந்த மூன்று வேளாண் சட்டங்களும் மீட்டுக்கொள்ளப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.
"இந்தியாவின் விவசாயிகள், குறிப்பாக சிறிய அளவில் விவசாயம் செய்பவர்களின் நிலையை மேம்படுத்தவே இந்த சட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
"ஆனால் அவற்றால் ஏற்படக்கூடிய நன்மைகளைப் பற்றி விவசாயிகள் புரிந்துகொள்ள தவறிவிட்டனர். அவர்களுக்குப் புரிய வைக்க நாங்கள் தவறிவிட்டோம்," என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் அந்த மூன்று வேளாண் சட்டங்
களையும் எதிர்த்துப் போராட்டத்தில் இறங்கினர்.
தலைநகர் புதுடெல்லி எல்லையில் அவர்கள் முகாமிட்டு
அதிருப்தியை வெளிப்படுத்தினர். அவர்களில் பெரும்பாலானோர்
சீக்கியர்கள்.