இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் இடை
விடாது பெய்து வரும் மழையால் திருப்பதி மலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
திருப்பதி ஏழுமலையான் திருக்கோயில் வளாகத்துக்குள் வெள்ள நீர் புகுந்துள்ள நிலையில், கோயில் அடைக்கப்பட்டுள்ளது.
கரைபுரண்டோடும் வெள்ளம் காரணமாக இறை வழிபாட்டுக்காக வந்த பக்தர்கள் கோயிலிலிருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் தங்குமிடம் ஆகியவற்றை கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
திருப்பதியில் இதுபோன்ற வெள்ளம் இதற்கு முன்பு நிகழ்ந்ததில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
காட்டாறு போல பாய்ந்து சென்ற வெள்ளத்தில் பல வாகனங்கள்
அடித்துச் செல்லப்பட்டன.