ஐவர் ஒன்றுகூடலாம், ஒன்றாக உணவருந்தலாம்

ப. பால­சுப்­பி­ர­ம­ணி­யம்

முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர் நாளை முதல் அதி­க­பட்­சம் ஐந்து பேர் கொண்ட குழுக்­க­ளாக உணவகங்களில் அமர்ந்து உண­வ­ருந்­த­லாம். அவர்­கள் ஒரே குடும்­பத்தினராக இருக்க வேண்­டு­ம் என்ற அவசியமில்லை.உண­வங்­காடி நிலை­யங்­க­ளி­லும் காப்­பிக் கடை­க­ளி­லும் இந்தத் தளர்­வு­கள் வரும் செவ்வாய்க் கிழமை முதல் நடப்­புக்கு வரும்.

வாடிக்­கை­யா­ளர்­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­களா என்­பதை அக்­க­டை­கள் உறுதிசெய்ய வேண்­டும். அவ்­வாறு செய்­யா­விட்­டால் இரு­வர் மட்­டுமே சேர்ந்து உண­வ­ருந்த முடி­யும்.

மேலும், நாளை முதல் ஐவர் வரை ஒன்­று­கூ­ட­வும் அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

ஒரு­நா­ளுக்கு அதி­க­பட்­சம் ஐந்து விருந்­தி­னர்­களை வீட்­டுக்கு அழைக்­க­லாம். இதற்கு முன், இரு விருந்­தி­னர்­க­ளுக்கு மட்­டுமே அனு­மதி வழங்­கப்­பட்­டது. கொவிட்-19 அமைச்­சுகள்­நிலை பணிக் குழு செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் நேற்று பேசிய வர்த்­தக, தொழில் அமைச்­சர் கான் கிம் யோங், ஒட்­டு­மொத்த கொவிட்-19 நில­வ­ரம் சீராக இருப்­ப­தோடு வார தொற்று வளர்ச்சி விகி­தம் ஒன்­றுக்­கும் அல்­லது அதற்­கும் குறை­வாக இருப்­ப­தால், தற்­போது கட்­டுப்­பா­டு­களைத் தளர்த்­தும் நிலை­யில் சிங்­கப்­பூர் உள்­ளது என்றார்.

அத்துடன், கிரு­மித்­தொற்­றால் அதி­கம் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்­கை­யும் சீராக உள்­ளது என்று அவர் குறிப்­பிட்­டார்.

கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­டா­லும் எச்­ச­ரிக்­கை­யு­டன் செயல்­பட வேண்­டும் என்று வலி­யு­றுத்­திய அமைச்­சர் கான், இன்­னும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­கள் தங்­க­ளது நல­னுக்­காக முடிந்­த­வரை வீட்­டில் இருக்­கும்­படி கேட்­டுக்­ கொண்­டார்.

தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­க­ளின் வீடு­க­ளுக்­குச் செல்­வோர் அவர்­க­ளைச் சந்­திக்­கும் முன், கொவிட்-19 பரி­சோ­த­னையை மேற்­கொண்­டு­விட்டு செல்­லும்­படி ஊக்கு­விக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

"விரைவில் கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­ப­டு­வதை சிலர் விரும்­

பி­னா­லும், இதனை மிகப் பாது­காப்­பு­டன், படிப்­படி­யாகச் செயல்­ப­டுத்த வேண்­டும். அப்போதுதான் எதிர்­பாராத இடை­யே­று­க­ளைத் தவிர்க்க முடி­யும் என நம்­பு­கி­றோம்," என அமைச்­சர் கான் தெரி­வித்­தார்.

முடிந்­த­வரை தளர்த்­தப்­பட்ட கட்­டுப்­பா­டு­களை மீண்­டும் நடை­முறைப்­ ப­டுத்­தா­மல் இருக்க அமைச்சு­கள் நிலை பணிக் குழு முயற்சி செய்­யும் என்று நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங் கூறி­னார்.

"சுற்­று­லாத் தளங்­களில் அனு­ம­திக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்­கையை உயர்த்­து­வது வேலை­யி­டக் கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­து­வது போன்ற கோரிக்­கை­கள் விடுக்­கப்­பட்­டுள்­ளன. எல்­லாம் எதிர்­பார்த்­த­படி நடந்­தால், அடுத்த மாத இறு­தி­யில் மேலும் பல கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­து­வது குறித்து பணிக் குழு பரி­சீ­லனை செய்­யும்," என்று திரு வோங் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!