மருத்துவமனைகளிலும் பராமரிப்பு இல்லங்களிலும் தங்குவோரை நேரில் சென்று காண கொவிட்-19 முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கு நாளை முதல்
அனுமதி வழங்கப்படும். வருகையாளர்கள் சென்று பார்க்கும் நோயாளிகளும் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டிக்க வேண்டும்.
எனினும் மருத்துவ ரீதியாக தடுப்பூசி போட முடியாத நிலையில் இருப்போருக்கும் அசாதாரண சூழ் நிலையைப் பொருத்தும் விதிவிலக்கு அளிக்கப்படும் என்று சுகாதார அமைச்சு நேற்று அறிவித்தது.
"நோயாளிகளின் உடல்நலனைப் பேணிக்காக்க வேண்டும். அதே சமயம் குடும்ப ஆதரவும் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும்.
"அவர்கள் குணமடைவதற்கு அது மிகவும் முக்கியம். நோயாளிகளின் அன்புக்குரியவர்கள் அவர்களை வந்து பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டாலும் கிருமித்தொற்றால் எளிதில் பாதிப்படையக்கூடியவர்
களைப் பாதுகாக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்," என்று கொவிட்-19 அமைச்சுகள்நிலை பணிக் குழு செய்தியாளர் கூட்டத்தில் சிங்கப்பூர் மருத்துவச் சேவைகள் இயக்குநர் கென்னத் மாக் நேற்று தெரிவித்தார்.
மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெறும் ஒவ்வொரு நோயாளியும் ஒரு நாளில் இரண்டு முறை வருகையாளர்களைச் சந்திக்கலாம். ஒரே நேரத்தில் இருவருக்கு மட்டுமே அனுமதி உண்டு.
ஒவ்வொரு சந்திப்பும் அதிகபட்சம் அரை மணி நேரம் நீடிக்கலாம்.
ஆனால் நோயாளியின் படுக்கைக்குப் பக்கத்தில் ஒருவருக்கு மட்டுமே அனுமதி உண்டு.
நோயாளியைக் காண வருகையாளர்களுக்கு அதிகபட்சம் 30 நிமிடங்கள் வழங்கப்படும். அசாதாரண சூழ்நிலை களில் வருகையாளருக்கான நேரம் நீட்டிக்கப்படக்கூடும்.
நோயாளி கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தால் அவரைப் பார்க்க ஐவர் அனுமதிக்கப்படுவர்.
எனினும், ஒரே நேரத்தில் இருவர் மட்டுமே படுக்கைக்கு அருகே சென்று நோயாளியைப் பார்க்கலாம்.
பராமரிப்பு இல்லங்களில் அதிகபட்சம் நான்கு வருகையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும். ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே நோயாளியைச் சென்று பார்க்கலாம். ஒவ்வொரு சந்திப்பும் அதிகபட்சம் அரை மணி நேரம் நீடிக்கலாம்.
மருத்துவமனைகளுக்கும் பராமரிப்பு இல்லங்களுக்கும் செல்லும் வருகையாளர்கள் 24 மணி நேரத்துக்குள் சுகாதார அமைச்சின் அங்கீகாரம் பெற்ற பரிசோதனை நிலையங்களிலோ, சுயமாகவோ ஏஆர்டி பரிசோதனை செய்து கிருமித்தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
சமூக மன்ற நடவடிக்கைகள், நூலகம் செல்ல தடுப்பூசி தேவை
அடுத்த மாதம் 1ஆம் தேதியிலிருந்து முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் மட்டுமே தேசிய நூலக வாரியத்தின் நூலகங் களுக்குள் அனுமதிக்கப்படுவர்.
அதேபோல், சமூக மன்றங்களில் நடைபெறும் குறிப்பிட்ட சில நடவடிக்கைகளில் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் மட்டுமே பங்கேற்கலாம்.

