புதிதாக 1,670 பேர்க்குத் தொற்று; செப்டம்பர் 27க்குப் பிறகு ஆகக் குறைவான பாதிப்பு

சிங்கப்பூரில் நேற்று 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை புதிதாக 1,670 பேர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.


கடந்த செப்டம்பர் 27ஆம் தேதிக்குப் பிறகு ஒருநாளில் பதிவான ஆகக் குறைவான பாதிப்பு இது. செப்டம்பர் 27 அன்று 1,647 பேர்க்கு கொரோனா பாதிப்பு பதிவானது.


வாராந்திர கொவிட்-19 தொற்று உயர்வு விகிதம் நேற்று முன்தினம் சனிக்கிழமை 0.78ஆக இருந்த நிலையில், நேற்று அது 0.81 எனச் சற்றே கூடியது.


தொடர்ந்து ஒன்பது நாள்களாக இவ்விகிதம் ஒன்றுக்குக் கீழ் இருந்து வருகிறது.


மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் படுக்கைப் பயன்பாட்டு விகிதம் கடந்த இரு வாரங்களாகக் குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 56.8 விழுக்காடாக இருந்த இவ்விகிதம், நேற்று 52.9% என மேலும் குறைந்தது.


இதனிடையே, கொவிட்-19 தொற்றால் உடல்நிலை மோசமாகி, 63 முதல் 95 வயதிற்குட்பட்ட மேலும் எட்டுப் பேர் இறந்துவிட்டனர். இதனையடுத்து, கொரோனாவால் மாண்டோர் எண்ணிக்கை 662ஆக உயர்ந்தது.


சிங்கப்பூரில் இதுவரை 252,188 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுவிட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!