கிறிஸ்மஸ் பேரணியில் புகுந்து மோதித்தள்ளிய கார்; ஐவர் பலி

கிறிஸ்மஸ் பேரணியில் புகுந்து மோதித்தள்ளிய கார்; ஐவர் பலி

2 mins read
67dd03a0-0ce2-45c3-9f32-ce4e5459fd46
அமெ­ரிக்­கா­வின் விஸ்­கான்­சின் மாநி­லம், வாக்­கிஷா நக­ரில் கிறிஸ்மஸ் பேரணியில் புகுந்து பலரையும் மோதித் தள்ளிய சிவப்புநிற கார், அதற்குச் சில நிமிடங்கள் முன்னதாக சாலையோரம் நிற்கும் மக்களைக் கடந்து வேகமாகச் சென்றதை சமூக ஊடகத்தில் இடம்பெற்ற காணொளியில் இருந்து எடுக்கப்பட்ட இந்தப் படம் காட்டுகிறது. படம்: ராய்ட்டர்ஸ் -

அமெ­ரிக்­கா­வின் விஸ்­கான்­சின் மாநி­லம், வாக்­கிஷா நக­ரில் நடந்த விடுமுறை நாள் கிறிஸ்­மஸ் பேர­ணி­யில் வேக­மாக வந்த ஒரு கார் புகுந்து பல­ரை­யும் முட்டி மோதித் தள்­ளி­ய­தில் ஐவர் கொல்­லப்­பட்­ட­னர். 40க்கும் மேற்­பட்­டோர் காய­ம­டைந்­த­னர்.

காரை ஓட்­டி­ய­வர் கைது செய்­யப்­பட்ட தாக­வும் அவர் ஓட்­டிச் சென்ற வாக­னம் பறி­மு­தல் செய்­யப்­பட்­டு உள்­ள­தா­க­வும் வாக்கிஷா நக­ர போலிஸ் தலை­வர் டேன் தாம்சன் தெரி­வித்­தார்.

"பேர­ணி­யில் சென்ற பல­ரை­யும் அவ்­வா­க­னம் இடித்­துச் சென்­றது. அவர்­களில் சிலர் குழந்­தை­கள். இச்­சம்­ப­வத்­தில் ஐவர் கொல்லப்பட்டனர். 40க்கும் மேற்பட்ட வர்கள் காயமடைந்தனர்," என ஃபேஸ்புக் பக்கத்தில் திரு தாம்சன் குறிப்பிட்டார்.

அது பயங்­க­ர­வா­தத் சம்­ப­வமா எனத் தெரி­ய­வில்லை என்­றும் அவர் கூறி­னார்.

காரை ஓட்டி வந்­த­வ­ரி­டம் ஆயு­தம் இருந்­த­தா­கத் தெரி­ய­வில்லை என்­றும் காரை தடுத்து நிறுத்த அதி­காரி ஒரு­வர் வாகனத்தை நோக்கி துப்­பாக்­கி­யால் சுட்­ட­தா­க­வும் போலிஸ் தலை­வர் தெரி­வித்­தார்.

அந்­தத் திடுக்­கி­டும் சம்­ப­வம் உள்­ளூர் நேரப்­படி ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை 4.39 மணிக்கு நிகழ்ந்­த­தா­க போலிஸ் கூறியது.

பேர­ணி­யா­கச் சென்­றோர்­ மீது மோதி­ய­போது அந்த வாக­னம் கிட்­டத்­தட்ட 40 மைல் (64 கிலோ­மீட்­டர்) வேகத்­தில் சென்­ற­தாக சம்­ப­வத்தை நேரில் கண்ட ஒரு­வர் சொன்­னார்.

காரை ஓட்டி வந்­த­வர் கூட்­டத்­தின் உள்ளே அங்­கு­மிங்­கு­மாக வாக­னத்­தைத் திருப்பித்திருப்பி ஓட்டி கூட்­டத்­தி­ன­ரைக் குறி­வைத்து இடித்­துத்­ தள்­ளி­விட்டு வாகனத்தை நேரே வேகமாக ஓட்­டிச்­சென்றார் என்று சம்­ப­வத்தை நேரில் பார்த்­த­வர்­கள் தெரி­வித்­தார்­கள்.

சிவப்பு நிற கார் கூட்­டத்­திற்­குள் புகுந்து பல­ரை­யும் இடித்­துத் தள்­ளி­விட்டு சென்­ற­தைக் காணொ­ளி­கள் காட்­டின.

இத­னி­டையே, சூழ்­நி­லையை அணுக்­க­மா­கக் கண்­கா­ணித்து வரு­வ­தா­கத் தெரி­வித்த வெள்ளை மாளிகை, சம்­ப­வம் நிகழ்ந்த வட்­டார அதி­கா­ரி­க­ளுக்கு ஆதரவை­யும் உத­வி­யை­யும் வழங்க தயார் என்றும் குறிப்பிட்டது.