இறங்குமுகத்தில் கிருமித்தொற்று

சிங்கப்பூரில் நேற்று திங்கட்கிழமை (நவம்பர் 22) புதிதாக 1,461 பேர்க்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அதற்கு முந்திய நாளில் இந்த எண்ணிக்கை 1,670ஆகப் பதிவானது.


கடந்த செப்டம்பர் 27ஆம் தேதியில் இருந்து ஒருநாளில் பதிவான ஆகக் குறைவான எண்ணிக்கை இது. செப்டம்பர் 27ஆம் தேதி 1,647 பேர்க்கு கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது.


வாராந்திர தொற்று உயர்வு விகிதம் நேற்று 0.79ஆகக் குறைந்தது. நேற்று முன்தினம் ஞாயிறன்று இவ்விகிதம் 0.81ஆக இருந்தது.


மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் படுக்கைப் பயன்பாட்டு விகிதம் கடந்த ஞாயிற்றுக்கிழமை 52.9 விழுக்காடாக இருந்த நிலையில், நேற்று அது 53.5% எனச் சற்றே கூடியது.


சிங்கப்பூரில் இதுவரை 253,649 பேரை கொரோனா தொற்றிவிட்டது.


இதனிடையே, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரில் 61 முதல் 105 வயதிற்குட்பட்ட மேலும் ஐவர் இறந்துவிட்டனர். இதனையடுத்து, சிங்கப்பூரில் கொரோனா தொற்றி மாண்டோர் எண்ணிக்கை 667 ஆனது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!