தடுப்பூசிப் பயணத்தடத் திட்டம்: மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் வர 4,000 பேருக்கு அனுமதி

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே ஆகாயவழி தடுப்பூசிப் பயணத்தடத் திட்டத்தின்கீழ், மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் வர 4,000க்கும் மேற்பட்டோருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பயண அனுமதிக்கான விண்ணப்பங்கள் திங்கட்கிழமை (நவம்பர் 22) தொடங்கிய 14 மணிநேரத்தில் அவர்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்பில் ஊடகங்களின் கேள்விகளுக்கு இன்று பதிலளித்த சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், நேற்று திங்கட்கிழமை இரவு 11.59 மணி நிலவரப்படி, மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் வர 4,124 பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது.

அவர்களில் 1,792 பேர் குறுகியகால வருகையாளர்கள், 2,332 பேர் நீண்டகால அனுமதி அட்டை வைத்திருப்போர்.

இதற்கிடையே, இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வர 1,126 பேருக்குப் பயண அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தோனீசியாவில் இருந்து சிங்கப்பூர் வர 2,681 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் 2,068 பேர் குறுகியகால வருகையாளர்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!