மலேசியாவில் 4வது தொற்று அலை: நிபுணர்கள் எச்சரிக்கை

மலேசியாவில் 4வது தொற்று அலை: நிபுணர்கள் எச்சரிக்கை

1 mins read

அண்­மை­யில் மலாக்­கா­வில் நடந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லால் மலே­சி­யா­வில் கொவிட்-19 நான்­கா­வது அலை உரு­வாக வாய்ப்­புள்­ள­தா­கச் சுகா­தார வல்­லு­நர்­கள் எச்­ச­ரித்­து உள்­ள­னர்.

அப்­படி நான்­கா­வது அலை உரு­வா­னால், 'டெல்டா' போன்ற உரு­மா­றிய கிரு­மி­க­ளா­லேயே அதிக பாதிப்பு ஏற்­ப­ட­லாம் என்­றும் அத­னால் மருத்­து­வ­ம­னை­யில் அனு­மதிக்­கப்­ப­டு­வ­தும் இறப்பு விகி­த­மும் கூட­லாம் என்­றும் அவர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இந்நிலையில், கடந்த சனிக்­கிழமை மலாக்­கா­வில் நடந்த சட்­ட­மன்­றத் தேர்­தல் எதி­ரொ­லி­யாக இன்னொரு கொரோனா அலை உருவானால் அதனை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாக மலேசிய சுகாதாரத் துணை அமைச்சர் ஏரன் அகோ டகாங் கூறியிருக்கிறார். தேர்­தல் முடிந்து 10-14 நாள்­களுக்­குப் பிறகே விளைவு­கள் தெரி­ய­வ­ரும் என்று அவர் சொன்­னார்.

இதனிடையே, டிசம்பர் 18ஆம் தேதி சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.