அரசாங்க ஊழியர்களுக்கு ஒரு மாத போனஸ் அறிவிப்பு

அரசாங்க ஊழியர்கள் அனைவர்க்கும் ஆண்டிறுதி போனசாக ஒரு மாத ஊதியம் வழங்கப்படும் என்று பொதுச் சேவைப் பிரிவு அறிவித்துள்ளது.


இளநிலை ஊழியர்களுக்குக் கூடுதலாக ஒருமுறை மட்டும் $500 வழங்கப்படும். MX15 மற்றும் MX16 தரநிலைகளுக்கு நிகரான பதவிகளில் இருப்போர்க்கும் ஓஎஸ்எஸ் தரநிலை III, IV ஊழியர்களுக்கும் இந்தக் கூடுதல் தொகை கிடைக்கும்.


“கடந்த ஓராண்டாக, கொவிட்-19 தொற்றுக்கு எதிரான தேசிய அளவிலான போரில் அரசாங்க ஊழியர்கள் தங்களை அர்ப்பணித்து வந்துள்ளனர். சிங்கப்பூரையும் சிங்கப்பூரர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க அவர்கள் களைப்பறியாது பணியாற்றி வருகின்றனர்,” என்று பொதுச் சேவைப் பிரிவு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.


அவர்களது நீடித்த கடின உழைப்பையும் கொவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் பலதரப்பட்ட பங்களிப்பையும் அங்கீகரிக்கும் வகையில் போனஸ் வழங்கப்படுவதாக அது குறிப்பிட்டுள்ளது.


இதனுடன், வழக்கம்போல் அரசாங்க ஊழியர்கள் அனைவர்க்கும் 13வது மாத போனஸ் எனக் குறிப்பிடப்படும் வருடாந்திர சம்பள நிரப்புத்தொகையும் (AWS) வழங்கப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!