சிங்கப்பூரில் புதிதாக 1,275 கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக வியாழக்கிழமையன்று சுகாதார அமைச்சு தெரிவித்தது .இந்த எண்ணிக்கை புதன்கிழமையின் எண்ணிக்கையான 2,709ஐக் காட்டிலும் குறைவு.
கொவிட்-19 வாராந்திர கிருமித்தொற்று விகிதம் புதன்கிழமை நிலவரப்படி 0.75 இலிருந்து 0.72க்கு குறைந்திருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
புதிய கிருமித்தொற்றுகளில் 1,228 சமூகத்தைச் சேர்ந்தவை. 31 சம்பவங்கள் ஊழியர் தங்கும் விடுதிகளைச் சேர்ந்தவை. 16 சம்பவங்கள் சமூகத்தில் பதிவானவை.
சிங்கப்பூரில் இதுவரை மொத்தம் 258, 785 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
புதிதாக மூவர் உயிரிழந்ததாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்தது. 69 வயதுக்கும் 74 வயதுக்கும் இடைப்பட்ட அந்த மூவருக்கு ஏற்கெனவே உடல்நல பாதிப்புகள் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.