உருமாறிய கொவிட்-19 கிருமி வகையான பி.1.1.529 மிக வேக
மாகப் பரவக்கூடியது எனக் கூறப்
படுகிறது.
அது சில ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வருவதாகத் தகவல்கள் வெளியானதை அடுத்து, ஏழு ஆப்பிரிக்க நாடுகள் மீதான பயணக் கட்டுப்பாடுகளை சுகாதார அமைச்சு கடுமையாக்கியுள்ளது.
அண்மையில் போட்ஸ்வானா, எஸ்வாட்டினி, லெசோத்தோ, மொஸாம்பிக், நமிபியா, தென்னாப்பிரிக்கா, ஸிம்பாப்வே ஆகிய ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட பயணிகளுக்கு இன்று இரவு 11.59 மணியிலிருந்து சிங்கப்பூருக்குள் நுழையவோ சிங்கப்பூரிலிருந்து வேறு நாடுகளுக்குப் பயணம் செய்யவோ அனுமதி வழங்கப்படாது.
சிங்கப்பூருக்கு வர ஏற்
கெனவே அனுமதி பெற்றிருந்
தாலும் கடந்த 14 நாட்களில் மேல் குறிப்பிடப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளுக்குச் சென்றிருந்தால் சிங்கப்பூருக்குள் நுழைய முடியாது. அந்த ஏழு ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து சிங்கப்பூர் திரும்பும் சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தர
வாசிகளுக்கும் இல்லத் தனிமை உத்தரவு பிறப்பிக்கப்படும். அதற்காக அமைக்கப்பட்டுள்ள இடங்களில் அவர்கள் உத்தரவை நிறைவேற்ற வேண்டும்.
சிங்கப்பூரில் புதிய உருமாறிய கொவிட்-19 கிருமி வகையால் யாருக்கும் பாதிப்பு இல்லை என்று சுகாதார அமைச்சு உறுதிப்
படுத்தியுள்ளது.
"புதிய உருமாறிய கொவிட்-19 கிருமி வகை மற்ற கிருமி வகையைவிட வேகமாகப் பரவக்கூடியது என்று கூறப்படுகிறது. இருப்பினும், அது எந்த அளவுக்கு உடல்நிலையைப் பாதிக்கும் என்று இன்னும் தெரியவில்லை. இது
குறித்து நாங்கள் விசாரணை நடத்துகிறோம். கிடைக்கும் தரவு களைக் கொண்டு எல்லைக்
கட்டுப்பாடுகள் குறித்து மறுஆய்வு செய்வோம்," என்று சுகாதார அமைச்சு கூறியது.
புதிய கிருமி வகையால் தென்னாப்பிரிக்காவில் கொவிட்-19 பாதிப்பு அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இம்மாதத் தொடக்கத்துடன் ஒப்பிடும்போது அந்நாட்டில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பத்து மடங்கு அதிகரித்துள்ளது. ஹாங்காங்கிலும் புதிய கிருமி வகையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக தென்னாப்பிரிக்கா மற்றும் மேலும் ஐந்து ஆப்பிரிக்க நாடுகளுடனான
பயணத் தடையை பிரிட்டன் அறிவித்துள்ளது.
இதற்கிடையே, தென்னாப்
பிரிக்கா மற்றும் புதிய கிருமி வகையால் பாதிக்கப்பட்டுள்ள
தாகக் கூறப்படும் நாடுகளி
லிருந்து இந்தியாவுக்கு வருவோரைத் தீவிர கொவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்தும்படி அனைத்து மாவட்டங்களுக்கும் இந்தியாவின் மத்திய அரசு
உத்தரவிட்டுள்ளது.