கொவிட்-19 நெருக்கடிநிலையால் ஏற்பட்டுள்ள சமூக, பொருளியல் பாதிப்புகளை முறியடித்து அவற்றிலிருந்து மீண்டுவர மீள்திறன் மிகவும் அவசியம் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
எனவே, ஆசிய நாடுகளும் ஐரோப்பிய நாடுகளும் ஒன்றிணைந்து இந்தச் சவாலை எதிர்கொள்ள வேண்டும் என்று மெய்நிகர் முறையில் நேற்று நடைபெற்ற ஆசிய-ஐரோப்பிய உச்சநிலை மாநாட்டில் திரு லீ வலியுறுத்தினார்.
"உதாரணத்துக்கு, பொதுத் துறை, தனியார் துறையில் நமக்குக் கிடைத்துள்ள அனுபவங்களை நாம் பகிர்ந்துகொள்ள ஏற்பாடு செய்யலாம். விநியோக முறை மீண்டும் முழுமையாகச் செயல்படவும் அனைத்துலகப் பயணங்
களைப் பாதுகாப்பான முறையில் மீண்டும் தொடங்கவும் ஆசிய நாடுகளும் ஐரோப்பிய நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும்," என்று திரு லீ கூறினார்.
நெருக்கடிநிலையால் ஏற்பட்ட பாதிப்பிற்கு ஒன்றிணைந்து தீர்வு காண அழைப்பு விடுத்த பிரதமர் லீ சியன் லூங்.
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்