‘வசதி குறைந்த பிள்ளைகளுக்கு அதிக பாதிப்பு’

கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யால் சிறு பிள்­ளை­க­ளைக் கொண்ட குறைந்த வரு­மா­னக் குடும்­பங்­கள் ஆக அதி­க­மா­கப் பாதிப்­ப­டைந்­துள்­ளன. வீட்­டி­லி­ருந்து பாடம் கற்­கும் அணு­குமு­றை­யால் குறைந்த வரு­மா­னக் குடும்­பங்­க­ளைச் சேர்ந்த பிள்­ளை­க­ளுக்­குக் கூடு­தல் பின்­ன­டைவு ஏற்­பட்­டுள்­ள­தா­கப் பெரிய அள­வில் நடத்­தப்­பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் தெரி­ய­வந்­துள்­ளது. உதா­ர­ணத்­துக்கு, தனி­யார் வீடு­களில் வசிக்­கும் பிள்­ளை­களில் 98 விழுக்­காட்­டி­ன­ருக்குக் கணினி அல்­லது 'டேப்லட்' உள்­ளன. ஆனால் வாடகை வீட்­டில் வசிக்­கும்

பிள்­ளை­களில் 88 விழுக்­காட்­டி­ன­ருக்கு மட்­டுமே இந்­தச் சாத­னங்­கள் உள்­ளன.

3,108 குடு­ம்பங்­க­ளைச் சேர்ந்த இரண்டு வய­துக்­கும் ஒன்­பது வய­துக்­கும் இடைப்­பட்ட 4,355

பிள்­ளை­க­ளி­டம் ஆய்வு நடத்­தப்­பட்­டது. ஆய்­வில் பங்­கெ­டுத்த குடும்­பங்­களில் பத்து விழுக்­காட்டு குடும்­பங்­கள் வேலை இழப்­பால் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. அக்­கு­டும்­பங்­களில் குறைந்­தது ஒரு­வர் தமது வேலையை இழந்­துள்­ளார்.

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக வாடகை வீடு­களில் வசிக்­கும் குடும்­பங்­களில் 20 விழுக்­காடு குடும்­பங்­க­ளுக்கு இந்­தப் பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது. ஐந்­தறை, எக்­செக்­யூட்­டிவ், தனி­யார் வீடு­களில் வசிப்­போ­ரை­விட வீவக வாடகை வீடு­களில் வசிக்­கும் குடும்­பங்­கள் வேலை இழப்­பால் அதிகம் பாதிக்­கப்­பட்­டுள்­ள­ன.

இந்­நி­லை­யில், குடும்­பத்­தின் ஒரு மாத வரு­மா­னத்­துக்கு ஈ­டான சேமிப்பு தங்­க­ளுக்கு இல்லை என்று பத்­தில் மூன்று குடும்­பங்­கள் மனந்­தி­றந்­துள்­ள­ன.

வாடகை வீடு­களில் தங்­கு­வோ­ரில் 50 விழுக்­காட்­டி­னர் இந்த நிலையை எதிர்­நோக்­கு­கின்­ற­னர்.

"பொரு­ளி­யல் பாதிப்பு, வீட்­டி­ல்­இருந்து வேலை செய்­வது, பள்­ளி­கள் மூடப்­பட்­டது, சமூக இடை­வெளி விதி­மு­றை­கள் ஆகி­யவை குடும்­பங்­க­ளின் அன்­றாட

வாழ்க்­கை­மு­றையை இதற்கு முன் இல்­லாத அள­வில் மாற்றி, பாதிப்­பு­ களை ஏற்ப­டுத்­தி­யுள்­ளன. கொவிட்-19 நெருக்­க­டி­நிலை கார­ண­மாக வசதி குறைந்த குடும்­பங்­கள் தொடர்ந்து பின்­ன­டை­வு­க­ளைச் சந்­திக்­கும் நிலை ஏற்­ப­டக்­கூ­டாது.

"அடுத்­த­டுத்த தலை­மு­றை­

க­ளுக்கு அந்­தப் பாதிப்­பு­கள் சென்று­வி­டக்­கூ­டாது. எனவே. வசதி குறைந்த குடும்­பங்­க­ளுக்கு ஆத­ர­வுக்­க­ரம் நீட்ட வேண்­டும்," என்று தி சன்டே டைம்ஸ் நாளி­

த­ழி­டம் முதன்மை ஆய்­வா­ளர்

பேரா­சி­ரி­யர் ஜீன் யேங் தெரி­வித்­தார். கொவிட்-19 நெருக்­க­டி­நிலையால் பல சிங்­கப்­பூ­ரர்­க­ள் பாதிப்படைந்திருப்பது குறித்து சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சுக்­குத் தெரி­யும் என்று அமைச்­சின் செய்­தித் தொடர்­பா­ளர் கூறி­னார். அதி­லும், வசதி குறைந்­த­வர்­கள் மிகக் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்­டி­ருப்­பதை அமைச்சு நன்கு அறிந்­தி­ருக்­கிறது என்­றார் அவர்.

நெருக்­க­டி­நி­லை­யால் ஏற்­பட்­டுள்ள நிதிச் சுமை­யைக் குறைக்க சில ஆத­ர­வுத் திட்­டங்­களை அர­சாங்­கம் அறி­மு­கப்­ப­டுத்­தி­யி­ருப்­

ப­தாக அமைச்சு கூறி­யது.

கொவிட்-19 மீட்சி மானி­யம், தற்­கா­லிக நிவா­ரண நிதி போன்ற திட்­டங்­கள் மூலம் வேலை இழந்து அல்­லது சம்­ப­ளம் குறைக்­கப்­பட்ட சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு நிதி­யு­தவி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!