சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான தரைவழி தடுப்பூசி பயணத்தடத்தின் தொடக்கத்திற்காக பிரதமர் லீ சியன் லூங் இஸ்மயில் சப்ரி யாக்கோப் சந்தித்து அதில் இணைந்து கலந்துகொண்டனர்.
விடிஎல் ‘எஸ்ஜி-எம்வை’ (“VTL SG-MY”) என்ற அறிவிப்பைக் கொண்ட ‘டிரான்ஸ்டார் டிராவல்ஸ்’ பேருந்துக்கு முன்னதாக அந்த இரண்டு தலைவர்கள் புகைப்படத்திற்கு ஒன்றாக நின்றதைப் பிரதமர் லீயின் நேரடி ஃபேஸ்புக் காணொளி ஒளிபரப்பு காட்டியது.
ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்தத் தரைவழி தடுப்பூசி பயணத்தடம் 1,440 குடிமக்கள் வரையில் அனுமதிக்கும். இந்த முறையில் பயணம் செய்பவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை.
இதற்கென்று நியமிக்கப்பட்ட பேருந்து சேவைகளில் முதலாவது ஜோகூர் பாரு திங்கட்கிழமை காலை 8 மணி புறப்பட்டது. இதுவே திரு இஸ்மைலில் முதல் அதிகாரபூர்வ சிங்கப்பூர் வருகையாகும். இவர் இன்று திரு லீயையும் அதிபர் ஹலிமா யாக்கோப்பையும் சந்தித்தார்.