எல்லை நடைமுறைகளைக் கடுமையாக்கும் சிங்கப்பூர்

3 mins read

'ஓமிக்ரான்' எதிரொலி: சமூக அளவில் தளர்வுகள் நிறுத்திவைப்பு

புதிய 'ஓமிக்­ரான்' கொவிட்-19 கிரு­மி காரணமாக சிங்­கப்­பூ­ரில் சமூக அள­வில் கூடு­தல் தளர்­வு­கள் இப்­போ­தைக்கு நிறுத்­தி­வைக்­கப்­ப­டு­வதாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

நாளை 2ஆம் தேதி வியா­ழக்­கி­ழமை இரவு 11.59 மணி முதல், வெளி­நா­டு­களில் இருந்து சிங்­கப்­பூர் வரு­வோர்க்­கான எல்லை நடை­மு­றை­கள் கடு­மை­யாக்­கப்­ப­டு­கின்­றன.

உள்­ளூ­ரில் இது­வரை ஓமிக்­ரான் கிருமி கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை என்­றா­லும், அது ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய பாதிப்பை மதிப்­பிட இந்த முன்­னெச்­ச­ரிக்கை நட­வடிக்­கை­கள் தேவைப்­ப­டு­வ­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர்க்­கான பய­ணத்­த­டத் திட்­டத்­தின்­கீழ் (விடி­எல்), நாளை இரவு 11.59 மணி­யி­லி­ருந்து விமா­னம் மூலம் சிங்­கப்­பூர் வந்­தி­றங்கு­வோர் கூடு­தல் கிரு­மித்­தொற்­றுப் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வர்.

அதா­வது, சிங்­கப்­பூர் வந்­தி­றங்­கிய மூன்­றா­வது, ஏழா­வது நாள்­களில் விரைவுப் பரி­சோ­தனை மையத்­தில், மேற்­பார்­வை­யின்­கீழ் தாங்­க­ளா­கவே ஆன்­டி­ஜன் விரை­வுப் பரி­சோ­தனை செய்­து­கொள்ள வேண்­டும்.

இப்போதைக்கு, சிங்­கப்­பூருக்கு புறப்­படு­ம் முன்­பும் இங்கு வந்­தி­றங்­கியதும் பய­ணி­கள் கொவிட்-19 பரி­சோ­தனை செய்­து­கொள்ள வேண்­டும்.

அடுத்ததாக, சிங்­கப்­பூ­ருக்கு வரும் அல்­லது சிங்­கப்­பூர் வழி­யாக வேறு நாடு­க­ளுக்­குச் செல்லும் விமா­னப் பயணி­கள், சிங்­கப்­பூ­ருக்­குப் புறப்­ப­டு­வதற்கு இரண்டு நாள்­க­ளுக்குமுன் கொவிட்-19 பரி­சோ­தனை செய்­து­கொண்டு, 'தொற்று இல்லை' எனச் சான்று பெற்­றி­ருக்க வேண்­டும்.

தற்­போது, ஹாங்­காங், மக்­காவ், சீனா, தைவான் உள்­ளிட்ட பகு­தி­களில் இருந்து வரு­வோர், புறப்­பாட்­டிற்­கு­முன் கொவிட்-19 பரி­சோ­தனை செய்­து­கொள்­ளத் தேவை­ இல்லை. சிங்­கப்­பூர் வந்­தி­றங்­கி­ய­தும் அவர்­கள் கொவிட்-19 பரி­சோ­தனை செய்­து­கொண்­டால் போதும். இந்­தப் பகு­தி­கள் தொற்று அபா­யம் குறை­வாக உள்ள பகு­தி­க­ளா­கக் கரு­தப்­ப­டு­கின்­றன.

மூன்­றா­வ­தாக, சிங்­கப்­பூர் வந்­தி­றங்­கும் பய­ணி­கள் அனைவரும் கொவிட்-19 பரி­சோ­தனை செய்­து­கொள்ள வேண்­டும். ஹங்­காங், சீனா, மக்­காவ், தைவான் ஆகிய பகு­தி­க­ளைத் தவிர்த்து மற்ற பகு­தி­களில் இருந்து, 'விடி­எல்' திட்­டத்­தைப் பயன்­ப­டுத்­தா­மல் இங்கு வரும் பய­ணி­கள் இந்த விதி­முறைக்கு உட்­படுத்­தப்­ப­டு­வர்.

தற்­போது, அத்­த­கை­யோர் இல்­லத் தனிமை உத்­த­ரவு முடி­வ­டை­யும்போது பரி­சோ­தனை செய்­து­கொள்ள வேண்டி­ உள்­ளது.

சென்ற மாதம் 12-27ஆம் தேதிக்­குள் சிங்­கப்­பூர் வந்­தோரிடமும் இங்கு வரு­முன் 14 நாள்­களுக்­குள் 'ஓமிக்­ரான்' பாதிப்பு கண்­ட­றி­யப்­பட்ட நாடு­கள் அல்­லது பகு­தி­களில் இருந்­தோ­ரி­ட­மும் கண்­கா­ணிப்பு நோக்­கங்­க­ளுக்­காக ஒரு­முறை மட்­டும் பிசி­ஆர் பரி­சோ­தனை நடத்­தப்­படும் என்று அமைச்சு தெரி­வித்­துள்ளது.

இத­னி­டையே, தாய்­லாந்து, கம்­போ­டியா, ஃபிஜி, மாலத்­தீவு, இலங்கை, துருக்கி ஆகிய நாடு­க­ளுக்­கான 'விடி­எல்' திட்­ட­ம் ஒத்­தி­வைக்­கப்­படும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

"புதுவகை கிருமி பர­வும் வேகம், தீவி­ரம் குறித்­தும் அதற்­கெ­தி­ராக தடுப்­பூ­சி­க­ளின் செயல்­தி­றன் குறித்­தும் குறைவான தகவல்களே கிடைத்துள்ளன. நிலை­மையை உன்னிப்பாகக் கவனித்து வரு­கி­றோம்," என்று நேற்­றைய செய்தி­யா­ளர் சந்­திப்­பின்­போது வர்த்­தக, தொழில் அமைச்­ச­ரும் கொவிட்-19 தொற்­றுக்­கெ­தி­ரான அமைச்­சு­கள்­நிலை பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வ­ரு­மான கான் கிம் யோங் கூறி­னார்.

கடுமையாகும் பரிசோதனை

விமானப் பயணிகள்

♦ விமானம் வழியாக சிங்கப்பூர் வரும் அல்லது சிங்கப்பூர் வழியாகச் செல்லும் பயணிகள் அனைவரும் புறப்பாட்டிற்குமுன் இரு நாள்களுக்குள் பரிசோதனை செய்துகொண்டு 'கொவிட்-19 தொற்று இல்லை' எனச் சான்று பெற்றிருக்க வேண்டும்

♦ சிங்கப்பூருக்கு வருபவர்கள், இங்கு வந்திறங்கியதும் பிசிஆர் சோதனைக்கு உட்பட வேண்டும்

♦ 'விடிஎல்' விமானங்களில் வருவோர், இங்கு வந்தபின் 3ஆம், 7ஆம் நாள்களில் விரைவுப் பரிசோதனை மையங்களில் ஏஆர்டி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்

எல்லைப்புற முன்களப் பணியாளர்கள்

♦ விமான நிலைய, எல்லைப்புற முன்களப் பணியாளர்களுக்கு வாரந்தோறும் பிசிஆர் பரிசோதனை

♦ ஏஆர்டி சோதனையில் தொற்று இருப்பது தெரியவந்தால் பிசிஆர் பரிசோதனைமூலம் உறுதிப்படுத்த வேண்டும்

வீட்டில் குணமடைதல் இல்லை

♦ 'ஓமிக்ரான்' தொற்று உறுதிப்படுத்தப்பட்டோரும் அக்கிருமி தொற்றியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவோரும் தேசிய தொற்றுநோய்த் தடுப்பு நிலையத்தில் அனுமதிக்கப்படுவர்

♦ நெருங்கிய தொடர்புடையோர் பிரத்தியேக இடங்களில் பத்து நாள்கள் தனிமைப்படுத்தப்படுவர்