புதிய வகை ஓமிக்ரான் தொற்று மூலம் உருவாகும் கடின நோய்க்கு எதிராக வலுவான பாதுகாப்பை பயோஎன்டெக் மற்றும் ஃபைசர் கொவிட்-19 தடுப்பூசிகள் வழங்கக்கூடும் என்று பயோஎன்டெக் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி, ராய்ட்டர்ஸ் ெசய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
அதே நேரம் பரவலாகப் பயன்
படுத்தப்பட்டு வரும் தனது தடுப்பூசியை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். பயோஎன்டெக்கின் கொமிர்னாட்டி தடுப்பூசியை இரண்டு அல்லது மூன்று தவணைகள் போட்டுக்கொண்டோரின் ரத்தத்தை பகுப்பாய்வு செய்வது தொடர்பான சோதனைக்கூட ஆய்வுப் பணிகள் நடந்து வருவதாகவும் அடுத்த இரு வாரங்களுக்கு இது நீடிக்கும் என்றும் டாக்டர் உகுர் சாஹின் என்னும் அந்தத் தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி போட்டுக்கொண்டோரின் ரத்தத்தில் கலந்த நோய் எதிர்ப்புத்திறன் ஓமிக்ரான் தொற்றைச் செயலிழக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளதா என்பதை ஆராய்ந்த பின்னரே புதிய தடுப்பூசி தேைவப்
படுமா என்பது பற்றிய முடிவெடுக்கப்படும் என்றார் அவர்.
"ஓமிக்ரான் தொற்று மூலம் உருவாகும் நோய்க்கு எதிரான கணிசமான பாதுகாப்பை எங்களது தடுப்பூசிகள் வழங்கக்கூடும் என்று நாங்கள் கருதுகிறோம்," என அவர் ராய்ட்டர்ஸிடம் கூறினார்.
ஓமிக்ரான் ஏற்படுத்தும் இலேசான அல்லது மிதமான நோய்க்கு எதிரான தடுப்பூசிப் பாதுகாப்பில் சில குறைபாடுகளை ஆய்வுக்கூட பரிசோதனை முடிவுகள் காட்டக்கூடும் என்று தாம் எதிர்பார்க்கிறபோதிலும் அந்தக் குறைபாடுகளை முன்கூட்டியே கணிப்பது கடினம் என்றார் டாக்டர் சாஹின்.
உலகம் முழுவதும் இரு பில்லியனுக்கும் மேற்பட்ட தடவை போடக்கூடிய தடுப்பூசியை வழங்கி உள்ள பயோஎன்டெக் நிறுவனம், தனது தடுப்பூசிக்கு மேம்பாடு தேவைப்
படுமா என்பது பற்றி தெளிவாகத் தெரியாத நிலையில் அந்த மேம்பாட்டுக்கான பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளது.