இந்தியாவில் முதன்முதலாக கர்நாடக மாநிலத்தில் இருவருக்கு 'ஓமிக்ரான்' கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பெங்களூரு விமான நிலையத்தை வந்தடைந்த 57 பேரில் 10 பேரைத் தேடி வருவதாக கர்நாடக சுகாதார அமைச்சர் டாக்டர் சுதாகர் தெரிவித்துள்ளார்.
"அவர்களின் கைபேசிகள் அணைத்து வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் குறிப்பிட்ட முகவரியிலும் ஆள் இல்லை," என்றார் அவர்.
'ஓமிக்ரான்' தொற்றிய இருவரின் முதல்நிலை, இரண்டாம்நிலைத் தொடர்புகள் என கிட்டத்தட்ட 500 பேரைக் கண்டறிந்து, அவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக 'தி இந்து' செய்தி கூறுகிறது.
இதனிடையே, தென்னாப்பிரிக்காவில் இருந்து ஜெய்ப்பூர் திரும்பிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவிலும் 28 பேரை 'ஓமிக்ரான்' தொற்றியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.