இந்தியா: பிப்ரவரிக்குள் மூன்றாவது கிருமித்தொற்று அலை

‘ஓமிக்ரான்’ பரவல் காரணமாக, இந்தியாவில் மூன்றாவது கிருமித்தொற்று அலை வரும் பிப்ரவரிக்குள் உச்சத்தை எட்டக்கூடும் என்று ஐஐடி விஞ்ஞானி மனீந்திர அகர்வால் முன்னுரைத்துள்ளார்.

ஆனால், அதன் தாக்கம் இரண்டாவது அலையைவிட குறைவாகவே இருக்கும் என்பது அவரது கணிப்பு.

கொரோனா தொற்றின் போக்கை கணித ரீதியில் கணிக்கும் நிபுணர்கள் குழுவில் இடம்பெற்றுள்ளார் பேராசிரியர் அகர்வால்.

இந்தியாவில் மூன்றாவது தொற்று அலை உச்சத்தை எட்டும்போது, அன்றாடம் 100,000 முதல் 150,000 பேர் வரை பாதிக்கப்படலாம்.

இதுவரை உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் அடிப்படையில் பார்க்கும்போது, டெல்டா திரிபு ஏற்படுத்திய பாதிப்பு அளவுக்கு ஓமிக்ரான் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று பேராசிரியர் அகர்வால் கருதினார்.

ஆனால், ஓமிக்ரான் பரவும் மையப் பகுதியான தென்னாப்பிரிக்காவில் நிலவரம் அணுக்கமாகக் கண்காணிக்கப்படுவதாக அவர் சொன்னார்.

தென்னாப்பிரிக்காவில் ஓமிக்ரான் பரவல் தலைதூக்கி இருந்தாலும், இதுவரை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்பதை பேராசிரியர் அகர்வால் சுட்டினார்.

டெல்டா திரிபு பரவலின்போது கடைப்பிடிக்கப்பட்டதுபோல, இரவு நேர ஊரடங்கு, கூட்டங்களுக்குத் தடை விதிப்பது ஆகியனவற்றைக் கடைப்பிடித்தால் கிருமிப் பரவல் உச்சம் தொடுவதைத் தவிர்க்கலாம் என்றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!