'மரண தண்டனை அவசியம்'

'மரண தண்டனை அவசியம்'

2 mins read
51a9f204-7ac1-462f-b6b8-221d12c2c154
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் 50ஆம் ஆண்டுநிறைவைக் குறிக்கும் விதமாக நினைவு அஞ்சல்தலைத் தொகுப்பை நேற்று வெளியிட்டார் பிரதமர் லீ சியன் லூங். உடன் சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் (இடது), பிரிவின் இயக்குநர் இங் செர் சோங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பிரதமர்: போதைப் புழக்கத்தைக் குறைவாக வைத்திருக்க கடும் சட்டங்கள் தேவை

சிங்­கப்­பூ­ரில் போதைப் புழங்­கி­களின் எண்­ணிக்­கை­யைக் குறை­வாக வைத்­தி­ருப்­ப­தில் கடும் சட்­டங்­களும் மரண தண்­ட­னை­யும் முக்­கி­ய­மா­ன­தாக விளங்கி வரு­கின்­றன என்று பிர­த­மர் லீ சியன் லூங் தெரி­வித்­துள்­ளார்.

போதைப்­பொ­ருள்­க­ளைச் சட்­ட­பூர்­வ­மா­ன­தாக்­கப் பரி­சீ­லிக்­கும்­படி சிங்­கப்­பூ­ருக்கு நெருக்­கடி அதி­க­ரித்து வருவதை பிர­த­மர் சுட்­டி­னார்.

உள்­நாட்­டில் போதைப் புழக்­கத்­தைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யாத பல நாடு­கள், கட்­டுப்­பாட்டை ஓர­ளவு மீட்­டெ­டுக்­கும் முயற்­சி­யாக போதைப்­பொ­ருள்­களை, குறிப்­பாக கஞ்­சா­வைச் சட்­ட­பூர்­வ­மாக்க முடிவு­செய்­துள்­ளன என்று திரு லீ கூறி­னார்.

"ஆனால், அப்­ப­டிச் செய்­யும் எண்­ணம் சிங்­கப்­பூ­ருக்கு இல்லை. மற்­ற­வர்­கள் செய்­வ­தைப் பின்­பற்­றா­மல், சிங்­கப்­பூ­ருக்கு எது நல்­லது என்­பதை நாம் முடி­வு­செய்ய வேண்­டும்," என்­றார் அவர்.

குட்­வுட் பார்க் ஹோட்­ட­லில் நேற்று நடந்த மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரி­வின் 50ஆம் ஆண்டுநிறைவு நிகழ்ச்­சி­யின்­போது இவ்­வாறு பேசிய பிர­த­மர் லீ, போதைப் புழக்­கத்­திற்கு எதி­ரான போரில் அவ்­வ­மைப்­பின் மூன்று முக்­கிய உத்­தி­க­ளைப் பட்­டி­ய­லிட்­டார்.

போதைப் புழக்­கத்­திற்கு எதி­ரா­கக் கடும் சட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது முத­லா­வது உத்தி.

1971 அக்­டோ­பர் 19ஆம் தேதி தொடங்­கப்­பட்ட மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரிவு, முதல் பத்து மாதங்­க­ளி­லேயே 1,000க்கும் மேற்­பட்ட அதி­ர­டிச் சோத­னை­களை நடத்தி, போதைப்­பொ­ருள்­களைப் பறி­மு­தல் செய்­தது.

ஆனாலும், தண்­டனை குறை­வாக இருந்­த­தால் போதைப்­ புழங்கி­க­ளை­யும் கடத்­தல்­கா­ரர்­களை­யும் தடுக்க முடி­ய­வில்லை என்று திரு லீ குறிப்­பிட்­டார்.

பின்னர், அவர்களுக்குக் கடும் தண்­டனை விதிக்­கும் வகை­யில் 1973ல் போதைப்­பொ­ருள் ஒழிப்­புச் சட்­டம் இயற்­றப்­பட்­ட­தாகவும் 1975ல் கடு­மை­யான போதைப்­பொ­ருள் குற்­றங்­க­ளுக்கு மரண தண்­டனை அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் அவர் சொன்­னார்.

இந்­தக் கடும் தண்­டனை அறி­விப்­பால் உட­னடி விளை­வு­களை உணர முடிந்­த­தா­கக் கூறிய அவர், அதன்­பின் சிங்­கப்­பூ­ருக்­குள் போதைப்­பொ­ருள் கடத்­து­வோ­ரின் எண்­ணிக்கை மிக­வும் குறைந்­து­விட்­ட­தா­க­வும் குறிப்­பிட்­டார்.

மறு­வாழ்­வும் நீடித்த பொது விழிப்­பு­ணர்­வும் பிர­த­மர் குறிப்­பிட்ட போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் மற்ற இரு முக்­கிய உத்­தி­கள்.