புதிய வகை ஓமிக்ரான் தொற்றுக்கு எதிராக பிரிட்டன் தனது போராட்டத்தைத் தொடங்கி உள்ளது.
அங்கு ஓமிக்ரான் தொற்றியோரின் எண்ணிக்கை ஒவ்வொரு மூன்று நாளிலும் இரட்டிப்பாகி வருவதாக 'நியூயார்க் டைம்ஸ்' செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை வரை பிரிட்டனில் 817 பேரிடம் ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அன்றாடம் புதிதாக உறுதி செய்யப்படும் கொரோனா தொற்றுச் சம்பவங்களின் சராசரி எண்ணிக்கையான 48,000ஐ காட்டிலும் இது சிறிதுதான் என்று அதி
காரிகள் கூறினர்.
"இதே நிலை நீடித்தால் அடுத்த இரண்டு முதல் நான்கு வார காலத்தில் ஓமிக்ரான் தொற்று கொரோனா தொற்று எண்ணிக்கையில் கிட்டத்தப்பட்ட பாதி அளவு என்ற நிலையை எட்டி விடும் என எதிர்பார்க்கிறோம்," என பிரிட்டன் அரசாங்கத்தின் சுகாதாரப் பாதுகாப்பு முகவை எச்சரித்து உள்ளது.
'இேலசான பாதிப்பையே
ஓமிக்ரான் ஏற்படுத்தும்'
இதற்கிடையே, ஓமிக்ரான இலேசான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த மருந்து கண்காணிப்பு நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.
டெல்டா வகையைக் காட்டிலும் குறைந்த பாதிப்பையே ஏற்
படுத்தும் என்று இவ்வாறு உலக சுகாதார நிறுவனம் தெரிவித்ததைத் தொடர்ந்து ஐரோப்பிய மருந்து முகவை (இஎம்ஏ) இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் கருத்துகளை இதுவும் பிரதிபலித்தாலும் இது தொடர்பாக மேலும் பல விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கூறியது.
"இதுவரை ஓமிக்ரான் தொற்றிய சம்பவங்களின் அடிப்படையில் இது இலேசான பாதிப்பையே ஏற்படுத்தக்கூடும்.
"இருப்பினும் இதர வகைக் கிருமிகளைக் காட்டிலும் ஓமிக்ரான் ஏற்படுத்தக்கூடும் என்பதற்குப் போதுமான ஆதரங்களை நாங்கள் திரட்ட வேண்டி உள்ளது," என்று இஎம்ஏவின் உயிர் மருத்துவ சுகாதார அச்சுறுத்தல் மட்டும் தடுப்பூசி உத்தி பிரிவின் தலைவர் மார்கோ கேவல்ரி தெரிவித்துள்ளார்.