மாணவர் மனநலத்துக்கு கூடுதல் முக்கியத்துவம்

மாணவர் மனநலத்துக்கு கூடுதல் முக்கியத்துவம்

2 mins read

மாண­வர்­க­ளின் மன­ந­லத்­துக்கு முக்­கி­யத்­

து­வம் கொடுத்து அதை மேம்­ப­டுத்த கடந்த ஐந்து மாதங்­க­ளாக சிங்­கப்­பூ­ரில் உள்ள

பள்­ளி­கள் தீவிர முயற்­சி­களில் இறங்­கி­யுள்­ளன. கடந்த ஜூலை மாதம் ரிவர் வேலி உயர்­நி­லைப்­பள்­ளி­யில் மாண­வர் ஒருவர்

மர­ணம் அடைந்­த­தைத் தொடர்ந்து, மாண­வர் மன­ந­லம் குறித்து அதி­கம் பேசப்­பட்டு வரு­கிறது.

புதுப்­பிக்­கப்­பட்ட பண்­புள்ள குடி­மக்­கள் பாடத்­திட்­டத்­தின்­கீழ் உயர்­நிலை ஒன்­றாம், இரண்­டாம் மாண­வர்­க­ளுக்கு மன­ந­லக்

கல்­வி அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இந்­தப் பாடங்­கள் அடுத்த இரண்டு ஆண்டு­களில் தொடக்­கப்­பள்ளி மாண­வர்­கள், உயர்­நி­லைப்­பள்ளி மாண­வர்­கள்,

பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு முந்­திய நிலை­யில் பயி­லும் மாண­வர்­கள் அனை­வ­ருக்­கும் படிப்­

ப­டி­யாக அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும் என்று கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் நேற்று தெரி­வித்­தார். மாண­வர்­க­ளின் மன­ந­லத்­துக்­குக் கல்வி அமைச்சு எப்­போ­தும் முன்­னு­ரிமை தந்­தி­ருப்­ப­தாக அவர் வலி­யு­றுத்­தி­னார்.

கடந்த செப்­டம்­பர் மாதத்­தி­லி­ருந்து ஒவ்­வொரு தவ­ணை­யின் தொடக்­கத்­திலும் மாண­வர்­க­ளின் மன­நி­லை­யைப் பற்றி ஆசி­ரி­யர்­கள் தெரிந்­து­கொள்ள அனைத்­துப் பள்­ளி­களும் நேரம் ஒதுக்­கு­வ­தாக 'இட் வில் பி ஆல்­ரைட்' எனும் மின்­னூ­லின் தொடக்க விழா­வில் கலந்துகொண்டு பேசிய அமைச்­சர் சான் தெரி­வித்­தார்.

'மாண­வர்­க­ளின் மன­ந­லத்­தைக் கண்

காணிக்­க­வும் அவர்­கள் நல­மு­டன் இருப்ப தற்­குத் தேவை­யான ஆத­ரவை வழங்­க­வும் நடை­மு­றைக்கு ஒத்­து­வ­ரும் கற்­பித்­தல் உத்தி முறை­கள் ஆசி­ரி­யர்­க­ளுக்கு வழங்­கப்

பட்­டுள்­ளன. மன­ந­லம் குறித்து மாண­வர்

களி­டம் பேச­வும் அது­தொ­டர்­பான விவ­கா­ரங்­கள் பற்றி கலந்­து­ரை­யா­ட­வும் சக மாண­வர்­க­ளின் மன­நி­லை­யைக் கண்­கா­ணிக்­கும் முறையை நடப்­புக்­குக் கொண்டு வர­வும் பாடத்­திட்­டங்­கள் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளன," என்­றார் திரு சான்.

இளை­யர்­கள் பல்­வேறு சவால்­க­ளை­யும் அழுத்­தங்­க­ளை­யும் எதிர்­நோக்­கு­வதை அவர் சுட்­டி­னார். கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யால் மாண­வர்­க­ளுக்கு மன­வு­ளைச்­சல் அதி­க­ரித்­தி­ருப்­ப­தாக அவர் கூறி­னார். சிர­மம் ஏற்­

ப­டும்­போது மாண­வர்­கள் பலர் தங்­கள் நண்­பர்­க­ளி­டம் உதவி நாடு­வது வழக்­கம் என்­றார் அவர். எனவே, சக மாண­வர்­க­ளுக்கு மற்ற மாண­வர்­கள் ஆத­ர­வுக்­க­ரம் நீட்­டும் அணு­கு ­மு­றை­யைத் தொடர்ந்து ஊக்­கு­விக்க வேண்­டும் என்­றார் அமைச்­சர் சான். மேலும்

கல்­வி­யில் வெற்றி பெற்­றால்­தான் வாழ்­வில் வெற்றி பெற்­ற­தாக அர்த்­தம் என்ற மனப்­போக்கை மாற்ற வேண்­டும் என்­றார் அவர்.