பிரித்தம் சிங்: பொய்யுரைக்குமாறு ரயீசா கானிடம் சொல்லவில்லை

பிரித்தம் சிங்: பொய்யுரைக்குமாறு ரயீசா கானிடம் சொல்லவில்லை

3 mins read
94d924e9-a603-40cd-bd77-83e0f49028e2
கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற உரிமைக் குழு விசாரணையில் பங்கெடுத்து, விளக்கமளித்த பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங். படம்: யூடியூப் Gov.sg -

செங்­காங் குழுத்­தொ­குதி முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்பினர் ரயீசா கானி­டம் பொய்­யு­ரைக்­கும்­படி தாம் சொல்­ல­வில்லை என்று பாட்­டா­ளிக் கட்­சி­யின் தலை­மைச் செய­லா­ளர் பிரித்­தம் சிங் கூறி­ய­தாக அவ்­வி­வ­கா­ரம் குறித்து விசா­ரித்து­வ­ரும் உரி­மைக்­குழு தெரி­வித்துள்­ளது.

ஆயி­னும், திரு­வாட்டி ரயீசா கான் தமது தவற்­றைச் சரி­செய்து­கொள்ள கடந்த ஆகஸ்ட் - செப்­டம்­பர் மாதங்­க­ளுக்­கு இடைப்பட்ட காலத்தில் தாம் எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­க­வில்லை என்று திரு சிங் கூறி­னார்.

திரு­வாட்டி ரயீசா நாடா­ளு­மன்­றத்­தில் பொய்­யு­ரைத்த விவ­கா­ரம் தொடர்­பில் உரி­மைக்­குழு சிறப்பு அறிக்கை ஒன்றை நேற்று வெளி­யிட்­டது. இது, அத­னு­டைய மூன்­றா­வது அறிக்கை.

அவ்­வி­வ­கா­ரம் வெளிச்­சத்­திற்கு வந்­தால் அத­னைக் கையாள வேண்­டி­யது திரு­வாட்டி ரயீ­சா­வின் பொறுப்பு என்று திரு சிங், அவ­ரி­டமே அதனை விட்­டு­விட்­ட­தா­க­வும் அவ்­வ­றிக்கை குறிப்­பிட்­டது.

"அந்த விவ­கா­ரம் எழுப்­பப்­ப­டா­விட்­டால், தாமாக முன்­வந்து அதைத் தெளி­வு­ப­டுத்­தும் திட்­டம் தன்­னி­டம் இல்லை என்­றும் அது ரயீ­சா­வின் பொறுப்பு என்­றும் திரு சிங் கூறி­னார்," என்று அந்த அறிக்கை தெரி­வித்­தது.

நாடா­ளு­மன்­றத்­தில் பொய்­யு­ரைத்­த­தைத் திரு­வாட்டி ரயீசா ஒப்­புக்­கொண்­ட­தைக் கட்­சித் தலை­வர்­க­ளி­டமோ பொது­மக்­க­ளி­டமோ வெளிப்­ப­டுத்த வேண்­டாம் என்று தாம் முடி­வு­செய்­த­தா­க­வும் அது முக்­கி­ய­மில்லை என்று தாம் கரு­தி­ய­தா­க­வும் கடந்த வெள்­ளிக்­கிழமை உரி­மைக்­கு­ழு­வின் முன்­னி­லை­யா­ன­போது திரு சிங் விளக்­க­ம­ளித்­தார்.

அந்­தப் பொய்­யால் காவல்­துறைக்­குப் பெரும் தீங்கு ஒன்று நேர்ந்­த­தா­கத் தாம் நினைக்­க­வில்லை என்­றும் திரு சிங் சொன்­னார்.

பாலி­யல் வன்­மு­றை­யால் பாதிக்­கப்­பட்ட பெண்­ணின் புகார் தொடர்­பில் காவல்­து­றை­யின் நட­வ­டிக்கை குறித்து நாடா­ளு­மன்­றத்­தில் பொய்­யு­ரைப்­பது சரியா என்று உரி­மைக் குழு கேட்­ட­தற்கு, காவல்­துறை ஒன்­றும் 'முதுகு ஒடிந்த' அமைப்­பல்ல என்று திரு சிங் பதில் சொன்­ன­தாக அவ்­வ­றிக்கை கூறி­யது.

அந்­தக் குற்­றச்­சாட்டு சரி­யா­னது­தானா என்­பதை ஆராய காவல்­துறை எந்த அள­விற்கு நட­வ­டிக்கை எடுத்­தது என்று அவர் கேள்­வி­ எ­ழுப்­பி­ய­தா­க­வும் அறிக்கை தெரி­வித்­தது.

காவல்­து­றைக்கு எதி­ரான திரு­வாட்டி ரயீ­சா­வின் பொய்­யான குற்­றச்­சாட்­டு­க­ளால் காவல்­து­றைக்­குக் கேடு விளை­வித்­து­விட்­ட­தா­கத் தாம் கரு­த­வில்லை என்­றும் திரு சிங் கூறி­னார்.

சட்ட, உள்­துறை அமைச்­சர் கா.சண்­மு­கம் நாடா­ளு­மன்­றத்­தில் கேள்­வி­யெ­ழுப்­பி­னால் தான் என்ன செய்ய வேண்­டும் என்று கேட்டு, திரு­வாட்டி ரயீசா கடந்த அக்­டோ­பர் 4ஆம் தேதி திரு சிங்­கிற்­குக் குறுஞ்­செய்தி அனுப்­பி­ய­தை­யும் உரி­மைக்­கு­ழு­வின் சிறப்பு அறிக்கை வெளிப்­ப­டுத்­தி­யது.

ஒன்­பது மணி நேரத்­திற்­கு­மேல் நீடித்த விசா­ர­ணை­யில், திரு­வாட்டி ரயீசா நாடா­ளு­மன்­றத்­தில் பொய்­யு­ரைத்­தது மிக­வும் கடு­மை­யான விஷ­யம் என்று ஒப்­புக்­கொண்­ட­தாக அவ்­வ­றிக்கை குறிப்­பிட்­டுள்­ளது.

பொய்­யு­ரைத்­ததை மூடி மறைத்­து­வி­டு­மாறு திரு­வாட்டி ரயீ­சா­வைக் கேட்­டுக்­கொண்­ட­தா­கச் சொல்­லப்­படு­வதை திரு சிங் மறுத்­தார்.

இம்­மா­தம் 3ஆம் தேதி வெளி­யான உரி­மைக் குழு­வின் முதல் அறிக்­கை­யில், நாடா­ளு­மன்­றத்­தில் தாம் பொய்­யு­ரைத்­ததை வெளி­யில் சொல்ல வேண்­டாம் என்று பாட்­டா­ளிக் கட்­சித் தலை­வர்­கள் ஆலோ­சனை கூறி­னர் என்று திரு­வாட்டி ரயீசா கூறி­ய­தா­கத் தெரி­வித்­தி­ருந்­தது.

கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி, பெண்­க­ளுக்­கான அதி­கா­ரம் தொடர்­பில் நாடா­ளு­மன்­றத்­தில் பேசி­ய­போது, பாலி­யல் வன்­முறைக்கு ஆளான பெண் ஒரு­வ­ரின் புகா­ரைக் காவல்­துறை தவ­றா­கக் கையாண்­ட­தா­கப் பொய் சொன்­னார்.

தாம் பொய்­யு­ரைத்­தது அம்­ப­ல­மா­கவே, நவம்பர் 30ஆம் தேதி திரு­வாட்டி ரயீசா கான் தமது எம்.பி. பத­வி­யில் இருந்­தும் பாட்­டா­ளிக் கட்­சி­யில் இருந்­தும் வில­கி­னார்.