பிரதமர் லீ: ஓமிக்ரானைச் சமாளித்து சிங்கப்பூர் மீண்டு வரும்

பிரதமர் லீ: ஓமிக்ரானைச் சமாளித்து சிங்கப்பூர் மீண்டு வரும்

2 mins read

உரு­மா­றிய புதிய கொவிட்-19 கிருமி­யான 'ஓமிக்­ரானை' சிங்­கப்­பூர் சமா­ளிக்­கும் என்று பிர­த­மர் லீ சியன் லூங் நம்­பிக்கை தெரி­வித்­துள்­ளார்.

தடுப்­பூ­சி­கள், பூஸ்­டர் ஊசி­களால் கொவிட்-19 கிரு­மி­யைச் சமா­ளிப்­ப­தில் சிங்­கப்­பூர் தற்­போது மிக­வும் வலு­வான நிலை­யில் உள்­ளது. கொவிட்-19 பய­ணத்­தில் சிங்­கப்­பூர் ஊக்­க­ம­ளிக்­கும் அறி­கு­றி­களைக் காணத் தொடங்­கி­யுள்­ளது என்று பிரதமர் குறிப்­பிட்­டார்.

"கிரு­மித்­தொற்று எண்­ணிக்கை அதி­க­ரிப்­பு, கடந்த மூன்று மாதங்­களில் குறைந்து வரு­கிறது. சிங்­கப்­பூர் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புக் கட்­ட­மைப்பை பாது­காத்­துள்­ள­துடன் மரண எண்­ணிக்­கை­யை­யும் குறை­வாக வைத்­துள்­ளது," என்று திரு லீ கூறி­னார்.

ஏறக்­கு­றைய 2,000 அல்­லது 3,000 ஆக இருந்த ஒரு நாளின் புதிய தொற்று எண்­ணிக்கை, கடந்த மாதத்­தின் நடுப்­ப­கு­தி­யிலிருந்து 1,000க்கும் குறை­வா­கி­யுள்­ளது.

கடந்த சில வாரங்­க­ளாக தீவிர சிகிச்சைப் பிரி­வில் சிகிச்சை பெறும் நோயா­ளி­க­ளின் எண்­ணிக்­கை­யும் குறைந்­துள்­ளது.

டிசம்­பர் 12ஆம் தேதி தீவிர சிகிச்சைப் பிரி­வில் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்ட நோயா­ளி­கள் 30 பேர் இருந்­த­னர், நவம்­பர் 12ஆம் தேதி­யன்று இந்த எண்­ணிக்கை 75 பேராக இருந்­தது. டிசம்­பர் 12ஆம் தேதி அன்று தீவிர சிகிச்சைப் பிரி­வின் பயன்­பாட்டு விகி­தம் 46.9 விழுக்­காடு என்றார் திரு லீ.

"உரு­மா­றிய 'ஓமிக்­ரான்' கிருமி ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய பாதிப்­பு­க­ளுக்கு சிங்­கப்­பூர் தயா­ராகி வரு­கிறது. கிரு­மி­யைச் சமா­ளிக்­கும் உத்­தி­யின் முக்­கிய அங்­க­மாக பூஸ்­டர் தடுப்­பூசி இருக்­கும்," என்று பிர­த­மர் லீ நேற்று தெரி­வித்­தார்.

1.3 மில்­லி­யன் சிங்­கப்­பூர்க் குடும்­பங்­க­ளுக்கு $100 பெறு­மா­ன­முள்ள சமூக மேம்­பாட்டு மன்­றப் பற்­றுச்­சீட்டு வழங்­கும் புதிய தவ­ணைக்­கான நிகழ்ச்­சி­யில் அவர் பேசி­னார்.

உள்­ளூ­ரில் இரு­வ­ருக்கு ஓமிக்­ரான் தொற்று உறு­தி­செய்­யப்­பட்­டுள்­ளது. இரு­வ­ரும் சாங்கி விமான நிலை­யத்­தில் பணி­பு­ரி­யும், முழு­மை­யான தடுப்­பூ­சி­யும் பூஸ்­டர் ஊசி­யும் போட்­டுக்­கொண்ட முன்­க­ளப் பணி­யா­ளர்­கள்.

ஐந்து முதல் 11 வயது வரை­யிலான சிறார்­க­ளுக்­கான தடுப்­பூசி இயக்­கம் இந்த ஆண்டு இறு­திக்­குள் தொடங்­கும் என்­றும் சென்ற வாரம் சுகா­தார அமைச்சு அறி­வித்­தது. நாடளா­விய பூஸ்­டர் தடுப்­பூசி இயக்­கம் 18 முதல் 29 வய­து­டை­ய­வர்­க­ளுக்­கும் இன்று முதல் நீட்டிக்­கப்­படும் என்­றும் கூறி­யது.

டிசம்­பர் 10ஆம் தேதி நில­வ­ரப்­படி, மொத்த மக்­கள் தொகை­யில் 30 விழுக்­காட்­டினர் பூஸ்­டர் ஊசி போட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.