ஹாங்காங் தீ விபத்தில் ஏராளமானோர் சிக்கித் தவிப்பு

ஹாங்காங் தீ விபத்தில் ஏராளமானோர் சிக்கித் தவிப்பு

1 mins read
e652913b-6232-4efa-90bc-aa154f1c13fa
உயரமான ஏணியைப் பயன்படுத்தி 39வது மாடியில் சிக்கிக்கொண்ட வர்களை மீட்கும் தீயணைப்புப் படை வீரர்கள். படம்: ராய்ட்டர்ஸ் -

ஹாங்­காங்­கின் 40 மாடி உலக வர்த்­தக மையக் கட்­ட­டத்­தில் நேற்று ஏற்­பட்ட தீயில் கிட்­டத்­தட்ட 150 பேர் மாட்­டிக்­கொண்­ட­னர்.

ஹாங்­காங்­கின் பர­ப­ரப்பு மிகுந்த வர்த்­தக மைய­மான காஸ்வே பேயில் உள்ள இந்­தக் கட்­ட­டத்­தின் கடை­கள் அமைந்­துள்ள கீழ்ப்பகுதி­யில் தீப்பிடித்தது.

அங்­குள்ள பய­னீட்டு அறை ஒன்­றில் நண்­ப­க­லில் தீப்பிடித்­த­தாக ராய்ட்­டர்ஸ் செய்தி குறிப்­பிட்­டது.

தீ பரவியதும் 100க்கும் மேற்­பட்­டோர் 39வது மாடிக்கு விரைந்­துள்­ள­னர். அங்கு உண­வ­கங்­கள், கடை­கள், அலு­­வலகங்­கள் உள்­ளன. அங்கே அவர்­கள் வெளி­யேற முடி­யா­மல் சிக்­கிக்­கொண்­டனர்.

கடும் புகை­யால் பாதிக்­கப்­பட்டு ஏழு பெண்­களும் ஓர் ஆட­வ­ரும் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­தா­க­வும் அவர்­களில் ஒரு­வர் அரை மயக்கத்தில் இருந்­த­தா­க­வும் செய்­தி­கள் கூறின.

தீய­ணைப்­பா­ளர்­கள் அதி­சக்தி வாய்ந்த தண்­ணீர்க் குழாய்­க­ளைக் கொண்டு தீயை அணைக்­கப் போரா­டி­யா­க­வும் ஏணி­கள், சுவா­சக் கரு­வி­க­ளைப் பயன்­ப­டுத்தி சிக்­கிக்­கொண்­டோரை மீட்­கும் பணி­யில் ஈடு­பட்­ட­தா­க­வும் ஹாங்­காங் அர­சாங்­கம் கூறி­யது. வெளி­யி­டப்­பட்ட படங்­களில் கட்­ட­டம் புகை­யில் மூழ்கி இருந்­த­தைக் காண முடிந்­தது. கட்­ட­டத்தை சுற்றி தீய­ணைப்பு வீரர்­கள் பாது­காப்பு தடுப்­பு­களை அமைத்­தி­ருந்­த­னர்.

பத்­தி­ரிகை அச்­சுக்­குச் செல்­லும் நேரம் வரை­யில் தீ குறித்த முழு விவ­ரங்­கள் வெளி­வ­ர­வில்லை.