தடுப்பூசி போட்ட சிங்கப்பூரர்களுக்கு ஆஸ்திரேலியாவில் கட்டுப்பாடு இல்லை

தடுப்பூசி போட்ட சிங்கப்பூரர்களுக்கு ஆஸ்திரேலியாவில் கட்டுப்பாடு இல்லை

2 mins read

சிட்னி, மெல்பர்ன் நகரங்களில் தனிமை உத்தரவு நீக்கம்

முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட சிங்­கப்­பூ­ரர்­கள் ஆஸ்­தி­ரே­லி­யா­வில் மூன்று நாள் தடை­காப்பு உத்­த­ரவை நிறை­வேற்ற வேண்­டிய அவ­சி­யம் இனி இருக்காது.

அடுத்த செவ்­வாய்க்­கி­ழமை (டிசம்பர் 21) முதல் அவர்­கள் சிட்னி, மெல்­பர்ன் நகர்­க­ளுக்கு கட்டுப்பாடின்றி விடு­மு­றைப் பய­ணம் மேற்­கொள்­ள­லாம்.

சிங்­கப்­பூ­ருக்­கும் ஆஸ்­தி­ரே­லி­யா­வின் சில பகு­தி­களுக்கும் இடை­யில் தடை­காப்பு கட்­டுப்­பாடு அல்­லாத இரு­வ­ழிப் பய­ணம் மூன்று வாரங்­க­ளாக நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யில் தற்­போது அது மீண்­டும் நடப்­புக்கு வரு­கிறது.

புதிய ஓமிக்ரான் தொற்று கண்டறியப் பட்டதைத் தொடர்ந்து நவம்பர் 28ஆம் தேதி முதல் சுயதனிமை உத்தரவை ஆஸ் திரேலியா அமல்படுத்தியது.

சிங்­கப்­பூ­ருக்­கான ஆஸ்­தி­ரே­லி­யா­வின் பயண முன்­னோ­டித் திட்­டத்­தின்­கீழ், தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட சிங்­கப்­பூ­ரர்­கள் ஆஸ்­தி­ரே­லி­யா­வின் சில பகு­தி­க­ளுக்கு சுற்­றுப் பய­ணம் உள்­ளிட்ட எல்லா வகை­யான பய­ணத்­தை­யும் கட்­டுப்­பா­டின்றி இனி அனு­ப­விக்­க­லாம்.

சிங்­கப்­பூ­ரர் அல்­லா­தோ­ரை­யும் உள்­ள­டக்­கிய, தகு­தி­பெ­றும் பய­ணி­கள் சிங்­கப்­பூ­ருக்­குத் திரும்­பும்­போது 'விடி­எல்' எனப்­படும் குடி­ய­ர­சின் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்­கான பய­ணத் தடத் திட்­டத்­தின்­கீழ் தடை­காப்பு உத்­த­ர­வைப் பின்­பற்­றும் தேவை இருக்­காது.

ஆஸ்­தி­ரே­லி­யா­வின் நியூ செளத் வேல்ஸ், விக்­டோ­ரியா மாநி­லங்­கள் அடுத்த செவ்­வாய்க்­கி­ழமை முதல் 72 மணி­நேர சுய­த­னிமை உத்­த­ர­வைக் கைவி­டு­கின்றன.

இருப்­பி­னும் அனைத்­து­ல­கப் பய­ணி­கள் இந்த மாநி­லங்­களை வந்­த­டைந்த 24 மணி நேரத்­திற்­குள் பிசி­ஆர் பரி­சோ­தனை செய்­து­கொள்ள வேண்­டும். தொற்று இல்லை என்று முடிவு வரும்­வரை அவர்­கள் சுய­த­னி­மை­யில் இருக்க வேண்­டும்.

மேலும், தொற்று இல்லை என்று காட்­டும் பய­ணத்­துக்கு முந்­திய கொவிட்-19 பரி­சோ­தனை முடிவை விமா­னத்­தில் ஏறு­வ­தற்கு மூன்று நாள்­க­ளுக்­குள் அவர்­கள் சமர்ப்­பிக்க வேண்­டும்.

இந்த இரு மாநி­லங்­க­ளி­லும் 16 வய­துக்கு மேற்­பட்ட குடி­யி­ருப்­பா­ளர்­களில் 90 விழுக்­காட்­டுக்­கும் மேற்­பட்­டோர் தடுப்­பூசி போட்­டுள்­ள­னர்.