ஓமிக்ரான் தொற்று உலகின் பொது சுகாதாரத்திற்கு தற்போது ஏற்பட்டிருக்கும் ஆகப்பெரிய அச்சுறுத்தல் என்று ஜி-7 எனப்படும் ஏழு நாடு
களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகளுடன் இணைந்து செயல்பட வேண்டிய அவசரநிலை ஏற்பட்டிருப்பதாகவும் அது கூறியுள்ளது.
"தொற்றுச் சம்பவங்களின் அதிகரிப்பால் பெருங்கவலை எழுந்துள்ளது. இந்தப் புதிய தொற்று உலகின் பொது சுகாதாரத்திற்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் என ஜி-7 சுகாதார அமைச்சர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்," என்று ஜி-7 அமைப்புக்குத் தலைமை ஏற்றிருக்கும் பிரிட்டன் தெரிவித்துள்ளது.
முன்னதாக, பிரிட்டன் ஏற்பாட்டில் ஜி-7 சுகாதார அமைச்சர்கள் சந்தித்துப் பேசினர். பூஸ்டர் தடுப்பூசிக்கான அவசியம் அதிகரித்துள்ளதை அவர்கள் அப்போது ஒப்புக்கொண்டனர்.