கொவிட்-19 பெருந்தொற்று 2024 வரை நீடிக்கலாம்: ஃபைசர்

கொவிட்-19 பெருந்தொற்று 2024 வரை நீடிக்கலாம் என்று தடுப்பூசித் தயாரிப்பு நிறுவனமான ஃபைசர் முன்னுரைத்துள்ளது.

2024ஆம் ஆண்டுவாக்கில் கொவிட்-19 நிரந்தர நோயாக மாறலாம் என்று அந்நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகள் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 17) கூறினர்.

அதாவது, பெருந்தொற்று எனும் உலகளாவிய அவசர நிலையிலிருந்து வட்டார அளவில் தொற்றுக் குழுமங்களை ஏற்படுத்தும் சளி/காய்ச்சல் போன்ற நிரந்தர நோயாக கொவிட்-19 வருங்காலத்தில் மாறலாம் என்பது அவர்களின் கணிப்பு.

கிருமி தொடர்ந்து பரவினாலும் தொற்றால் பாதிக்கப்படுவோர், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர், மரணமடைவோர் ஆகியோரின் எண்ணிக்கை கட்டுக்குள் கொண்டுவரப்படும்போது, கொவிட்-19 நிரந்தர நோய் என்ற நிலையை எட்டியதாகக் கருதப்படும்.

அந்த நிலையை எட்டுவதற்கு, உலக மக்கள்தொகையில் குறிப்பிடத்தக்க விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொண்டதன் மூலம் அல்லது முந்திய தொற்றுப் பாதிப்பில் இருந்து குணமடைந்ததன் மூலம் போதுமான அளவு நோயெதிர்ப்பாற்றலைப் பெற்றிருக்க வேண்டும்.

கொவிட்-19 நிரந்தர நோய் என்ற நிலையை எட்டுவதற்கான காலகட்டம், இடத்திற்கு இடம் வேறுபடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

“அடுத்த ஓரிரு ஆண்டில் உலகின் சில பகுதிகளில், கொவிட்-19 நிரந்தர நோய் என்ற நிலையை எட்டும். வேறு சில பகுதிகளிலோ, அது தொடர்ந்து பெருந்தொற்றாக நீடிக்கக்கூடும்,” என்றார் ஃபைசர் நிறுவனத்தின் தலைமை அறிவியல் அதிகாரி மைக்கல் டோல்ஸ்டன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!