மீள்திறன்மிக்க வெளிநாட்டு ஊழியரணி உருவாக திட்டம்

மீள்திறன்மிக்க வெளிநாட்டு ஊழியரணி உருவாக திட்டம்

2 mins read

மீள்­தி­றன்­மிக்க வெளி­நாட்டு ஊழி­ய­ர­ணியை உரு­வாக்க பல்­லாண்­டுத் திட்­டம் ஒன்­றில் மனிதவள அமைச்சு ஈடு­பட்டுள்­ளது. அதன் ஒரு­ப­கு­தி­யாக பல அம்­சங்­கள் நிறை­வேற்­றப்­பட உள்­ளன. வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­மி­டங்­க­ளின் தரம் உயர்த்­தப்­படும். சிறி­யதோ பெரி­யதோ எல்லா வகை­யான தங்கு­மி­டங்­களும் ஒரே­மா­தி­ரி­யான தரத்­தைப் பின்­பற்­று­வ­தற்கு ஏற்ற வகை­யில் சட்­டத்தை அதி­கா­ரி­கள் வலுப்­ப­டுத்­து­வார்­கள்.

ஊழி­யர்­கள் தங்­கும் பகு­தி­கள், அவர்­க­ளுக்­கான பொது­வான வச­தி­கள் ஆகி­ய­வற்­றின் தரத்தை மேம்­ப­டுத்­து­வ­தற்கு தற்­போ­துள்ள தங்­கு­மி­டங்­க­ளுக்­குக் கால அவ­கா­சம் வழங்­கப்­படும். இதன் தொடர்­ பில் அடுத்த ஆண்­டின் தொடக்­கப் பகு­தி­யில் அதி­க­மான கலந்­து­ரை­யா­டல்­கள் நடத்­தப்­படும்.

இவை அனைத்­தும் அமைச்சு தீட்­டி­யுள்ள பல்­லாண்­டுத் திட்­டத்­தின் ஒரு­ப­குதி. இங்­குள்ள வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு தர­மிக்க, எளி­தில் அணு­கக்­கூ­டிய, தங்­கு

­த­டை­யில்­லாத, கட்­டுப்­ப­டி­யா­கக்

­கூ­டிய சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு வச­தி­களை வழங்க இரட்­டிப்பு முயற்­சி­களை அமைச்சு மேற்­கொள்ளும்.

அத்­து­டன், சமூக ஈடு­பாட்டை அதி­கப்­ப­டுத்­து­வது, பொழு­து­போக்கு நிலை­யங்­களை மேம்­ப­டுத்­து­வது போன்­றவை மூலம் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் சமூ­க­ந­ல­னை­யும் அமைச்சு ஊக்குவிக்கும்.

இந்த விவ­ரங்­களை சிங்­கப்­பூ­ரின் வெளி­நாட்டு ஊழி­ய­ர­ணி­யின் தொலை­நோக்­குத் திட்­டத்தை வடி­வ­மைக்­கும் பணி­யில் ஈடு­பட்­டி­ருக்­கும் மனி­த­வள அமைச்­சர் டான் சீ லெங் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார். அனைத்­து­லக புலம்­பெ­யர்ந்­தோர் தினத்­தை­யொட்டி, சிங்­கப்­பூ­ருக்­குள் நுழைந்­தது முதல் தங்­க­ளது தாய்­நாட்­டுக்­குத் திரும்­பு­வதுவரை வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு உத­வும் நடை­மு­றைத் திட்­டத்தை அப்­போது அவர் விவ­ரித்­தார். படிப்­ப­டி­யான முன்­னேற்­றத்தை இந்த நடை­மு­றைத் திட்­டம் கொண்டி ருக்கும். பாது­காப்பு அம்­சங்­க­ளைக் கடைப்­பி­டித்து, நட­மாட்­டக் கட்­டுப்­பாடுகள் தளர்த்­தப்­ப­டு­வ­தன் மூலம் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் சமூ­கத்­து­டன் மறு­படி ஒருங்­கி­ணை­வ­தற்­கான திட்­டங்­க­ளை­யும் அமைச்சு வகுத்து வரு­கிறது.

இங்­குள்ள வெளி­நாட்டு ஊழி­யர்­களில் 98% முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்டு உள்­ள­னர். மேலும் பூஸ்­டர் தடுப்­பூ­சிக்­குத் தகு­தி­யுள்­ளோ­ரில் 88 விழுக்­காட்­டி­னர் அத­னைப் போட்­டுக்­கொண்­ட­னர். கூடு­தல் கட்­டுப்­பாட்­டுத் தளர்­வு­

க­ளுக்­குத் தேவை­யான பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளைக் கண்­ட­றி­வ­தன் அவ­சி­யம் குறித்து டாக்­டர் டான் வலி­யு­றுத்­தி­னார். கட்­டுப்­பா­டு­

க­ளைத் தளர்த்­து­வது என்­பது உணர்­வின் அடிப்­ப­டை­யில் அமை­யக்­கூ­டாது என்­றார் அவர்.

தங்­கு­வி­டு­தி­க­ளைச் சேர்ந்த ஊழி­யர்­க­ளுக்­கான கட்­டுப்­பா­டு­களை மேலும் தளர்த்­து­வ­தற்கு முன்­னர் ஓமிக்­ரான் நில­வ­ரத்தை தமது அமைச்சு அணுக்­க­மா­கக் கண்­கா­ணிக்­கும் என்­றார் அவர்.