'கொள்ளைநோய் 2024 வரை நீடிக்கக்கூடும்'

'கொள்ளைநோய் 2024 வரை நீடிக்கக்கூடும்'

2 mins read

ஈராண்டுகளுக்கு மேலாக உலகை ஆட்டிப்படைத்து வரும் கொவிட்-19 பெருந்­தொற்று, சில வட்டாரங்களில் இன்னும் சில ஆண்டுகள், அதாவது 2024 வரை நீடிக்­க­லாம் என தடுப்­பூ­சித் தயா­ரிப்பு நிறு­வ­ன­மான ஃபைசர் தெரிவித்துள்ளது.

2024ஆம் ஆண்­டு­வாக்­கில் கொவிட்-19 நிரந்­தர நோயாக மாற­லாம் என்று அந்­நி­று­வ­னத்­தின் மூத்த நிர்­வா­கி­கள் நேற்று முன்தினம் (வெள்­ளிக்­கி­ழமை) கூறி­னர்.

அதா­வது, பெருந்­தொற்று எனும் உல­க­ளா­விய அவ­ச­ர­நி­லை­யி­லி­ருந்து வட்­டார அள­வில் தொற்­றுக் குழு­மங்­களை ஏற்­ப­டுத்­தும் சளி­க்காய்ச்­சல் போன்ற நிரந்­தர நோயாக கொவிட்-19 அப்­போது மாற­லாம் என்­பது அவர்­க­ளின் கணிப்பு.

கிருமி தொடர்ந்து பர­வி­னா­லும் தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­வோர், மருத்­து­வ­ம­னை­களில் அனு­ம­திக்­கப்­ப­டு­வோர், மர­ண­ம­டை­வோர் ஆகி­யோ­ரின் எண்­ணிக்கை கட்­டுக்­குள் கொண்­டு­வ­ரப்­ப­டும்­போது, கொவிட்-19 நிரந்­தர நோய் என்ற நிலையை எட்­டி­ய­தா­கக் கரு­தப்­படும்.

அந்த நிலையை எட்­டு­வ­தற்கு, உலக மக்­கள்­தொ­கை­யில் குறிப்­பி­டத்­தக்க விழுக்­காட்­டி­னர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­தன் மூலம் அல்­லது முந்­திய தொற்­றுப் பாதிப்­பில் இருந்து குண­ம­டைந்­த­தன் மூலம் போது­மான அளவு நோயெ­திர்ப்பு சக்­தியைப் பெற்­றி­ருக்க வேண்­டும்.

கொவிட்-19 நிரந்­தர நோய் என்ற நிலையை எட்­டு­வ­தற்­கான கால­கட்­டம், இடத்திற்கு இடம் வேறு­படும் என்கின்றனர் நிபுணர்கள்.

"அடுத்த ஓரிரு ஆண்டுகளில் உல­கின் சில பகு­தி­களில், கொவிட்-19 நிரந்­தர நோய் என்ற நிலையை எட்­டக்கூடும். வேறு சில பகு­தி­களில் சமா­ளிக்­கக்­கூ­டிய அள­வில் குறைந்த தாக்­கத்­து­டன் அந்­தத் தொற்று நீடிக்­க­லாம்," என்­றார் ஃபைசர் நிறு­

வ­னத்­தின் தலைமை அறி­வி­யல் அதி­காரி மைக்­கல் டால்ஸ்­டன்.

புதிது புதி­தா­கத் தோன்­றும் தொற்று வகை­களும் கொவிட்-19 தொற்று நீடிக்­கும் காலத்­தில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டும் என்­றார் அவர்.

இதற்­கி­டையே, இரண்டு வயது முதல் நான்கு வயது வரை­யி­லான குழந்­தை­க­ளுக்­குத் தயார்­செய்­யப் பட்ட தடுப்­பூ­சி­யின் ஆற்­றல், எதிர் பார்த்­த­தைக் காட்­டி­லும் குறை­வாக இருப்­ப­தால் அதன் பயன்­பாட்டுக்கான அனு­ம­தி­யைப் பெறு­வ­தில் தாம­தம் ஏற்­ப­ட­லாம் என ஃபைசர் நிறு­வ­னம் தெரி­வித்துள்­ளது.

இந்த வய­துப் பிரி­வி­ன­ரை­யும் சேர்த்து 16 வய­துக்கு உட்­பட்ட சிறு­வர்­க­ளுக்கு மூன்று தடுப்­பூ­சி­கள் போடு­வ­தற்­கான சாத்­தி­யம் குறித்து ஆரா­யப்­பட்டு வரு­வ­தா­க­வும் அது கூறி­யது.