$820 மில்லியன் சாதனை முதலீடு

$820 மில்லியன் சாதனை முதலீடு

2 mins read

உயி­ரி­யல் மருத்­து­வத் துறைக்கு கிடைத்தது

உயி­ரி­யல் மருத்­து­வத் துறை நிறு­வ­னங்­கள் இந்த ஆண்டு இதுவரை சாதனை அள­வுக்கு முதலீட்டைப் பெற்றுள்ளன.

அவை 2021 ஜன­வரி முதல் செப்­டம்பர் வரையிலான காலத்­தில் US$600 மில்­லியன் (S$820 மில்­லி­யன்) தொகையைப் பெற்றதாக எண்­டர்பிரைஸ் சிங்­கப்­பூர் அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

அந்த முத­லீட்­டுத் தொகை­யில் கணி­ச­மான அளவை சிங்­கப்­பூ­ரின் ஒளி­ம­ய­மான சில புதிய நிறு­வ­னங்­கள் பெற்­றுள்­ளன.

எண்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர் அமைப்பில் சுகா­தார, உயி­ரி­யல் மருத்­து­வத் துறை இயக்­கு­ந­ராக இருக்­கும் திரு­வாட்டி ஆர்ட்ரி லோக், நிறு­வ­னங்­கள் முதலீடாகப் பெற்ற தொகை 2016ல் US$86 மில்லி­ய­னாக இருந்­தது. அது 2020ல் ஐந்து மடங்­குக்­கும் அதி­க­மா­கக் கூடியது என்று தெரி­வித்­தார்.

எண்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர் அமைப்பு சிங்­கப்­பூ­ரின் சிறிய, நடுத்­தர நிறு­வனங்­களுக்கு உதவி வரு­கிறது.

அது இந்த மாதத் தொடக்­கத்­தில் பல்வேறு புள்­ளி­வி­வ­ரங்­களை வெளி­யிட்­டது.

சிங்­கப்­பூ­ரில் உயி­ரி­யல் மருத்­துவப் புத்­தாக்கத் தொழில்­துறை கடந்த 10 ஆண்­டு­களில் கிட்­டத்­தட்ட ஆறு மடங்கு வளர்ச்சி கண்டு இருக்­கிறது. அந்­தத் துறை­யில் இன்­றைய தேதி­யில் 360க்கும் மேற்­பட்ட உயி­ரி­யல் மருத்­துவ புது நிறு­ வ­னங்­களும் நடுத்­தர அளவு நிறு­வனங்­களும் செயல்­ப­டு­கின்­றன என்று திரு­வாட்டி லோக் தெரி­வித்­தார்.

கொவிட்-19 தொற்றுச் சூழ­லில் இந்­தத் துறைக்குத் தேவை அதி­க­ரித்­த­தும் அதற்கு ஒரு கார­ணம் என்­றார் அவர்.

உயி­ரி­யல் மருத்­துவ உற்­பத்­தித் துறை 2019ல் சிங்­கப்­பூ­ரின் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யில் ஏறத்­தாழ 4 விழுக்­கா­ட்டுக்குப் பொறுப்பு வகிக்­கிறது.

இந்­தத் துறை வளர்­வ­தற்­கான வாய்ப்புகள் அதி­கம் இருப்­ப­தாக தேசிய சுகா­தாரப் பரா­ம­ரிப்­புக் குழு­மத்­தின் போதனை, ஆய்­வுத் துறை துணைத் தலைமை நிர்­வா­கி­யான பேரா­சி­ரி­யர் பெஞ்­ச­மின் சீட் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரின் உள்­நாட்­டுச் சந்தை மிக­வும் சிறி­யது என்­ப­தால் அது ஏற்­கெ­னவே நமக்கு ஒரு பாத­கம் என்று அவர் குறிப்­பிட்­டார்.

உயி­ரி­யல் தொழில்­நுட்ப நிறு­வ­னங்­கள் எல்­லை­க­ளைக் கடந்து செயல்­பட வேண்டி இருக்­கிறது என்­ப­தை­யும் அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.