மேலிருந்து சைக்கிளை கீழே தூக்கிப் போட்டதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

மேலிருந்து சைக்கிளை கீழே தூக்கிப் போட்டதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

1 mins read

பொங்­கோ­லில் உள்ள வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக அடுக்­கு­மாடி புளோக்கில் இருந்து சைக்­கிள் ஒன்றைத் தூக்கி கீழே போட்­ட­தாக 23 வயது சிங்­கப்­பூ­ரர் மீது குற்­றம் சாட்­டப்­பட்டு இருக்­கிறது.

ஏ. ஹரிந்­தர் என்ற அந்த ஆட­வர், கண்மூடித்தனமான காரி­யத்­தைச் செய்­த­தா­கக் கூறும் குற்­றச்­சாட்டை எதிர்­நோக்­கு­கி­றார்.

பொங்­கோ­லில் எட்ஜ்­ பிளேஸ் என்ற குடியிருப்புப் பகு­தி­யிலுள்ள புளோக் ஒன்­றில் இருந்து சைக்­கிள் ஒன்றை யாரோ தூக்கி கீழே போட்­ட­தாக பொது­மக்­களில் ஒருவர் வியா­ழக்­கி­ழமை காவல்­துறையிடம் புகார் கூறி­னார் என்று நேற்று அந்தத் துறையின் அறிக்கை தெரி­வித்­தது.

அங் மோ கியோ காவல்­துறை பிரி­வைச் சேர்ந்த அதி­கா­ரி­கள் படச்­சா­த­னங்­க­ளின் உத­வி­யு­டன் சந்­தே­கப்­பேர்­வ­ழியை அடுத்த நாளன்று கைது­ செய்­தனர்.

குற்­ற­வாளி என்று தீர்ப்­பா­னால் அவ­ருக்கு ஆறு மாதம் வரையிலான சிறைத்­தண்­டனை, $2,500 வரை யிலான அப­ரா­தம் அல்­லது இரண்­டும் தண்­ட­னை­யாக கிடைக்­கக்­கூ­டும்.

ஹரிந்­தர் டிசம்­பர் 31ஆம் தேதி மீண்­டும் நீதி­மன்­றத்­தில் முன்­னி­லை­யா­வார்.

மற்­ற­வ­ரின் உயி­ருக்கு அல்­லது பாது­காப்­புக்கு ஆபத்து விளை­விக்­கும் இத்­த­கைய செயல்­களை காவல்­துறை ஒரு­போ­தும் சகித்துக்­கொள்­ளாது.

சட்­டத்தை மீறு­வோ­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க காவல்­துறை தயங்­காது என்று அறிக்கை குறிப்­பிட்டு இருக்­கிறது.