டிச. 27 முதல் சிறார் தடுப்பூசி

டிச. 27 முதல் சிறார் தடுப்பூசி

2 mins read

சிங்­கப்­பூ­ரில் ஐந்து முதல் 11 வயது வரை­யி­லான சிறு­வர்­க­ளுக்கு கொவிட்-19 தடுப்­பூசி போடும் நட­வ­டிக்கை வரும் திங்­கட்­கி­ழமை (டிசம்­பர் 27) தொடங்­க­வுள்­ளது. அதற்­கான பதிவு இன்று (டிசம்­பர் 22) தொடங்­கும்.

தொடக்­க­நிலை 4 முதல் 6ஆம் வகுப்பு மாண­வர்­க­ளுக்கு முத­லில் தடுப்­பூ­சி­கள் போடப்­படும். தொடக்­க­நிலை 1 முதல் 3 வரை படிக்­கும் சிறு­வர்­க­ளுக்­கான பதிவு ஜன­வரி 3ஆம் தேதி தொடங்­கும்.

2009 முதல் 2012 வரை பிறந்த மற்றும் கல்வி அமைச்­சின் பள்­ளி­களில் இடம்­பெ­றாத இதர சிறு­வர்­க­ளுக்­குத் தடுப்­பூசி போட அவர்­க­ளது பெற்­றோர் பதிவுசெய்­ய­லாம். சுகா­தார அமைச்­சின் தேசிய பதி­வு­மு­றை­யில் அவர்­கள் பதிந்து ­கொள்­ள­லாம்.

தொடர்ந்து ஐந்து வயது மற்­றும் அதற்கு மேற்­பட்ட வய­தி­ன­ருக்கு (2013க்கும் 2017க்கும் இடை­யில் பிறந்த) எல்­லாக் குழந்­தை­க­ளுக்­கும் தடுப்­பூசி போடு­வ­தற்­கான பதிவு ஜன­வரி 10 முதல் தொடங்­கும். இவர்­க­ளின் பெற்­றோ­ரும் தேசிய பதி­வு­மு­றை­யில் பதிவு செய்­ய­லாம்.

கல்வி அமைச்­சும் பாலர்­ப­ருவ மேம்­பாட்டு அமைப்­பும் தடுப்­பூசி போடும் நட­வ­டிக்கை பற்­றிய விவ­ரங்­களை நேற்று வெளி­யிட்­டன.

தீவு முழு­வ­தும் உள்ள 15 குழந்தை தடுப்­பூசி நிலை­யங்­களில் கட்­டம் கட்­ட­மாக 300,000க்கும் மேற்­பட்ட சிறு­வர்­க­ளுக்­குத் தடுப்­பூசி போடப்­படும். அவற்­றில் ஏழு நிலை­யங்­கள் டிசம்­பர் 27 முதல் செயல்­படும். 2022 ஜன­வரி முதல் மேலும் ஏழு நிலை­யங்­கள் இயங்­கும்.

ஜன­வரி 11ல் இருந்து யூசோப் இஷாக் உயர்­நி­லைப் பள்­ளி­யில் ஒரு தடுப்பூசி நிலை­யம் செயல்­படும். இவை பற்­றிய முழு விவ­ரங்­கள் vaccine.gov.sg இணையத்தளத்தில் கிடைக்­கும்.

12 வயது, அதற்­கும் குறைந்த வய­துள்ள குழந்தைகளைப் பெற்­றோர் அல்­லது பொறுப்­பா­ளர் தடுப்­பூசி போட அழைத்து வர­வேண்­டும்.

தடுப்­பூசி நிலை­யத்­திற்­கு அவர்களை அழைத்­து­வ­ரும் பெற்றோர், மாண­வர் அடை­யாள அட்டை அல்­லது கட­ப்பிதழ், பிறப்புச் சான்­றி­தழ் போன்ற இதர ஆவணத்­தைக் கொண்டு வர­வேண்­டும்.

சிங்­கப்­பூர் குடி­மக்­கள், நிரந்­த­ர­வா­சி­கள், நீண்­ட­கால வருகை அட்­டை­யில் உள்­ள­வர்­

க­ளாக இருக்­கும் சிறு­வர்­கள் இந்­தத் தடுப்­பூ­சிக்­குத் தகு­தி­பெ­று­வர்.

சிறுவர்களுக்கான தடுப்பூசிகள் இன்று முதல் சிங்கப்பூர் வந்தடையும் என எதிர்பார்க்கப் படுகிறது.

5 வயது முதல் 11 வயது வரையுள்ள சிறுவர்களுக்கான பதிவு இன்று தொடக்கம்