‘விடிஎல்’ பயணச்சீட்டு விற்பனைக்குத் தடை சிங்கப்பூருக்கு வர ஜனவரி 20 வரை புதிதாக விமான, பேருந்து பயணச்சீட்டுகளை நிறுவனங்கள் விற்க அனுமதி இல்லை

தடுப்­பூசி போட்­டோ­ருக்­கான பய­ணப் பாதை (விடி­எல்) மூலம் சிங்­கப்­பூ­ருக்கு வரு­வ­தற்­கான புதிய விமானப் பய­ணச்சீட்­டு­களை விற்க இன்று முதல் ஜன­வரி 20 வரை பயண நிறு­வ­னங்­க­ளுக்­குத் தடை விதிக்­கப்­பட்டு உள்­ளது.

வெளி­நா­டு­களில் இருந்து சிங்­கப்­பூ­ருக்­குள் கொவிட்-19 தொற்று அதி­க­மாகப் பரவும் சூழ­லில் எல்லைக் கட்­டுப்­பா­டு­களை சிங்­கப்­பூர் கடு­மை­யாக்­கு­கிறது. அதன் ஒரு பகு­தி­யாக இந்­தத் தடை விதிக்­கப்­ப­டு­கிறது.

சிங்­கப்­பூ­ருக்­கும் மலே­சி­யா­வுக்­கும் இடை­யில் தரை வழி­ விடிஎல் பய­ணச்சீட்டு­களுக்­கும் இத்தடை பொருந்­தும்.

இதோடு, சிங்­கப்பூர்-மலே­சி­யாவுக்கு இடை­யில் தடுப்­பூசி போட்­டோருக்­கான தரைப் பய­ணப் பாதை வழியாக கடற்­பா­லத்­தைக் கடக்கும் பயணி­களின் எண்ணிக்கை வரும் ஜனவரி 21ஆம் தேதி முதல் பாதி­யா­கக் குறைக்­கப்­படும்.

இன்று முதல் வரும் ஜன­வரி 20ஆம் தேதி இரவு 11.59 வரை விடி­எல் தரை­வழி பயணத்திற்கான புதிய பேருந்துப் பய­ணச்சீட்­டு­களின் எண்­ணிக்கை தற்­கா­லி­க­மாக நிறுத்தி வைக்­கப்­படும்.

இதைத் தொடர்ந்து பய­ணி­களின் எண்­ணிக்­கை­யும் பாதி­யாகக் குறைக்­கப்­படும் என்று வர்த்­தக தொழில் அமைச்சு நேற்றுத் தெரி­வித்­துள்ளது.

இத­னி­டையே, சிங்­கப்­பூ­ரின் முடி­வை­யொட்டி சிங்­கப்­பூர் செல்­வதற்­கான பேருந்து, விமா­னப் பயணச்சீட்­டு விற்­பனை நிறுத்தி வைக்­கப்­பட்டு இருப்­ப­தாக மலேசி­யா­வின் சுகா­தார அமைச்சர் கைரி ஜமா­லு­தீன் தெரி­வித்­தார்.

விடிஎல் தரை, விமானப் பாதை பயணச்சீட்டுகள் விற்பனை இன்று முதல் ஜனவரி 20 வரை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அவர் கூறினார்.

இருந்­தா­லும் ஏற்­கெ­னவே பயணச்சீட்­டு­களை வாங்கி இருப்­போர் தனிமை உத்­த­ர­வில்­லாத விடி­எல் பயண ஏற்­பாட்­டின் மூலம் பய­ணம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகா­தார அமைச்சு நேற்று புதிய எல்லை கட்­டுப்­பா­டு­க­ளைப் பற்றி அறி­வித்­தது. புதிய உருமாறிய ஓமிக்­ரான் கிருமி தலை­காட்­டி­யது முதல் சிங்­கப்­பூ­ருக்கு வந்த வெளி­நாட்­டி­ன­ரி­டையே கிரு­மித்­தொற்று உள்­ள­வர்­க­ளின் எண்ணிக்கை புதிய உச்­சத்­தைத் தொட்டுள்ளது.

புதி­தாக நடப்­புக்கு வரும் எல்லைக் கட்­டுப்­பா­டு­கள் கார­ண­மாக, ஓமிக்­ரான் பற்றி மேலும் பல தக­வல்­களை நன்கு தெரிந்து­கொள்ள கால­அ­வ­கா­சம் கிடைக்­கும்.

அந்­தக் கிரு­மிக்கு எதி­ரான தற்­காப்பு ஆற்­றலை வலுப்­ப­டுத்து­வதற்­கும் போதிய காலம் இருக்­கும் என்றது அமைச்சு.

ஜன­வரி 20க்கு பிறகு விடி­எல் பய­ணி­கள் எண்­ணிக்கை வரம்பை­யும் பய­ணச்சீட்டு விற்­ப­னையை­யும் தற்­கா­லி­க­மாக குறைக்­க­ அதி­காரி­கள் முடிவு எடுத்து இருக்­கி­றார்­கள்.

இத­னி­டையே, சிங்­கப்­பூ­ருக்கு வரு­வ­தற்­கான விடி­எல் மொத்த விமானப் பய­ணச்சீட்­டு­க­ளின் எண்ணிக்­கை ஜன­வரி 21 முதல் பாதி அளவு குறைக்கப்படும் என்று சிங்­கப்­பூர் சிவில் விமா­னப் போக்கு­ வ­ரத்து ஆணை­யம் தெரி­வித்­தது.

விமா­னப் போக்­கு­வ­ரத்து துறையி­ன­ரைப் பாது­காக்க கூடு­தல் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களும் அமல்­ப­டுத்­தப்­படும் என்றும் அது குறிப்­பிட்­டது.

இவ்வேளையில், ஏற்­கெ­னவே விடி­எல் விமா­னப் பய­ணச்சீட்­டு­களை வாங்கி இருப்­போர் அந்த ஏற்­பாட்­டின் நிபந்­த­னை­களை நிறை­வேற்­றும் பட்­சத்­தில் தனிமையில் இருக்க வேண்டிய தேவை இல்லா­மல் சிங்­கப்­பூ­ருக்கு வர­லாம் என்று ஃபேஸ்புக் பக்­கத்­தில் போக்கு­வரத்து அமைச்­சர் எஸ். ஈஸ்­வ­ரன் நேற்று தெரி­வித்­தார்.

விடி­எல் பய­ணப் பாதை வழி சிங்­கப்­பூ­ருக்கு வரும் பய­ணி­கள் கடு­மை­யான அம­லாக்க நட­வடிக்கை­களை எதிர்­நோக்­கு­வார்­கள் என்று அமைச்சு தெரி­வித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!