ஓமிக்ரான் சமூகத்தொற்று எப்போது என்பதே கேள்வி

ஓமிக்ரான் சமூகத்தொற்று எப்போது என்பதே கேள்வி

1 mins read

உரு­மா­றிய கொவிட்-19 ஓமிக்­ரான் கிரு­மித்­தொற்று பல நாடு­க­ளி­லும் வட்­டா­ரங்­க­ளி­லும் பரவி வரும் சூழலில் சிங்­கப்­பூ­ரி­லும் மேலும் பலர் அந்­தக் கிரு­மித்­தொற்­றுக்கு ஆளாகி இருக்­கி­றார்­கள் என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்து உள்­ளது.

பய­ணி­க­ளுக்­கான பரி­சோ­தனை ஏற்­பா­டு­கள் மேம்­ப­டுத்­தப்­பட்­டதை அடுத்து இங்கு வந்த 65 பேருக்கு ஓமிக்­ரான் தொற்று இருந்­த­தாக தெரி­ய­வந்துள்­ளது என்­பதை அமைச்சு சுட்­டிக்­காட்­டி­யது.

தீவி­ர­மான தட­ம­றி­யும் நட­வடிக்கை, தொற்று தலை­காட்­டி­னால் உட­ன­டி­யாக அதைப் பர­வ­வி­டா­மல் தடுக்­கும் முயற்­சி­கள் கார­ண­மாக இப்­போ­தைக்கு சமூ­கத்­தில் ஓமிக்ரான் கிருமி பர­வு­வதை நாம் தடுத்து இருக்­கி­றோம்.

இருந்­தா­லும் அந்­தக் கிருமி எப்­போது நம் சமூ­கத்­தில் பர­வும் என்­பது­தான் இப்­போ­தைய பிரச்­சினை என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்து உள்­ளது.

சிங்கப்பூரில் சமூ­கத்­தில் இது­வரை­ ஆறு பேருக்கு ஓமிக்­ரான் தொற்று இருப்­ப­தாக கண்­ட­றி­யப்­பட்டு உள்­ளது.

இத­னி­டையே, ஓமிக்­ரான் தொற்று டெல்டா கிரு­மித்­தொற்றை­விட கடுமை குறைந்­தது அல்ல என்று பிரிட்­டனைச் சேர்ந்த ஒரு புதிய ஆய்வு மூலம் தெரி­ய­வந்து உள்­ளது.

இந்­நி­லை­யில், தொடர்ந்து நில­வரங்­களை அணுக்­க­மாகக் கண்­காணித்து சூழ்­நிலை மாற்­றங்­களுக்கு ஏற்ப கொள்­கை­களை மேம்­ப­டுத்தி வரப்­போ­வ­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்துள்­ளது.