மலேசியாவில் பல மாநிலங்கள் வெள்ளத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
நேற்றைய நிலவரப்படி
வெள்ளம் காரணமாக சிலாங்கூர், பாகாங், கிளந்தான் ஆகிய
மாநிலங்களில் 41 பேர் மாண்டு
விட்டனர்.
மாண்டவர்களில் 26 ஆடவர்களும் 13 பெண்களும் இரு சிறுவர்களும் அடங்குவர் என்று
மலேசியக் காவல் துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, வெள்ளம் காரணமாக நீர் வழி பரவக்கூடிய நோய்களால் பலர் பாதிப்படையக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அத்தகைய நோய்ப் பரவல் ஏற்பட்டால் அதை எதிர்கொள்ளத் தமது அமைச்சு தயாராக இருப்பதாக மலேசிய சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் நேற்று உறுதி அளித்தார்.
இதுவரை நீர் வழி பரவும் நோயால் யாருக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படவில்லை என்றார் அவர். இரண்டு வயது சிறுவனுக்கு மட்டும் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக அவர் கூறினார். நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருக்க தேவையான நட
வடிக்கைகளைத் தமது அமைச்சு எடுத்திருப்பதாக திரு கைரி தெரிவித்தார். பெரும்பாலான துயர் துடைப்பு நிலையங்களுக்கு
மருத்துவ அதிகாரிகள் அனுப்பப்
பட்டுள்ளதாகத் தெரிவித்தார் அமைச்சர் கைரி.
இந்நிலையில், அடுத்த ஆண்டுக்கான பள்ளித் தவணை ஜனவரி 9ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் டாக்டர் ரட்ஸி ஜிடின் அறிவித்துள்ளார்.

