நீல் ஜேசன்-ரேச்சல் சாமுவேல் தம்பதிக்கு இவ்வாண்டு கிறிஸ்மஸ் தினக் கொண்டாட்டம் வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாக அமைந்துள்ளது.
திருமணப் பந்தத்தில் இணைந்து மூன்று ஆண்டுகளாகியும்
குழந்தையில்லாத காரணத்தால் 'ஐவிஎஃப்' எனப்படும் செயற்கை முறையில் கருத்தரிக்கும்
முயற்சிக்குத் திருமதி ரேச்சல்
தயாரானார்.
ஆனால் அந்த சிகிச்சையைத் தொடங்குவதற்கு முன்பே இவ்வாண்டு ஜனவரி மாதம் அவர்
களுக்கு எதிர்பாரா நற்செய்தி கிடைத்தது. திருமதி ரேச்சல் கர்ப்பமானார்.
இருப்பினும், வெறும் 29 வாரங்
களிலேயே குழந்தையைப் பெற்
றெடுக்கும் நிலை ஏற்பட்டது.
இதனால் குழந்தைக்கு மருத்து வமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
குழந்தை பெத்தனி பிறந்து மூன்று வாரங்கள் ஆன பிறகே திருமதி ரேச்சலால் தமது மகளைத் தழுவிக்கொள்ள முடிந்தது.
இன்று குழந்தை பெத்தனி பிறந்து ஐந்து மாதங்களாகி
விட்டன.
பல சோதனைகளையும் சவால்
களையும் கடந்து வந்துள்ள நீல்-ரேச்சல் தம்பதியர் இன்று தங்கள் எழில்மிக்க பெண் குழந்தையுடன் கிறிஸ்மஸ் பண்டிகையை அளவில்லா மகிழ்ச்சியுடன்
கொண்டாடுகின்றனர்.

